, இனியவளின் இதய பகிர்வுகள் !: 2012

12/5/12

பஞ்சபூத சக்திகளே , கொஞ்சம் சக்தி தந்துதவ வேண்டுகிறேன் !

அன்பு கொண்ட நெஞ்சத்தை 
பண்பினால் தள்ளி வைத்தேன் . . .


துன்பத்திலிருந்து என்னவளை - நானும் 
கண்கொண்டு காப்பாற்ற,

விதியுடன் போட்டியிட்டு 
சதியினை வென்றிடுவேன் ...

நிலவு மகள் செய்திட்ட 
மதிகெட்ட தவறுகளால் - நானும் 
சிரம் தாழ்ந்து நிற்கிறேன் ...


செய்வதறியாமல் நானும் 
மெய்கலங்கி நிற்கிறேன் !

பஞ்சபூத சக்திகளே ,
கொஞ்சம் சக்தி தந்துதவ வேண்டுகிறேன் !

மன்னித்தாலும் மறத்தலும் 
என்றென்றும் தர்மமல்லவா ?

சான்றோரும் ஆன்றோரும் 
சொல்லிசென்ற நெறியல்லவா ?

ஏற்றுக்கொள்ள மறுப்பதேன் ?
சினம் கொண்டு வெறுப்பதேன் ?

பாசமும் நேசமும் இருபக்கம் ....
அஹிம்சையும் அன்பும் இருபக்கம் ....

நெஞ்சம் விம்மியழுது 
கொஞ்சமும் தாங்க  முடியலையே ...

ஆறுதல் சொல்லவும் யாருமில்லை ...
ஆலோசனை தரவும் யாருமில்லை . . .




11/20/12

உயிரே ... உனக்காக சில வரிகள் .....


கண்மணி இன்று 
கருத்துடன் தொடங்கிடும் 
காரியம் வெற்றியடைய...

நிலவின் பயணம் 
நிதானமாய் மெல்ல 
நினைத்ததை அடைந்திட ...

தேவதையின் தேடல் 
தேடியது கைகிடைத்து 
தேகம்சிலிர்த்திட ...

மலரவள் மனதில் 
மலர்திட்ட கனவுகள் 
மறுபடியும் நனவாகிட ...

மையிட்ட கண்ணும் 
செய்யிட்ட உதடுகளும் 
பையன மலர்ந்திட . . .

வெற்றிதனை நீ சுமந்து 
வீறுநடை நீ பயில 
சற்று தொலைவினில் - நானும் 
கண்கொண்டு ரசிப்பேன் ...

சுட்டெரிக்கும் சூரியனை 
பட்டு பூவாய் நீயும் 
பாதம் கீழ் நசுக்கிடு....

ஊர்கதைகள் எதுவும் 
உனக்கு வேண்டாம் ... 
உன் வெற்றி கதைதனை 
ஊராரை கதைக்க செய்...

தாய் தந்தை கனவுகளை 
தருணமெல்லாம் நீ நினைத்து 
மெல்ல நடை பயிலு... என் 
செல்ல கண்மணியே ...

வேதனை தானடி 
சாதனையின் இறுதிகட்டம் ?
விரும்பி ஏற்றுக்கொள் 
விருப்பம்  நிறைவேறும் ...
வெற்றிதனை எட்டிபிடிப்பாய் .... உன்னை 
சுற்றியுள்ளோர் நிமிர்ந்து பார்க்க ...

காட்சிகள் மறந்து 
கருத்தினை குவித்து 
கனவுகள் கோடி 
கைகொள்வாய் வாடி . . .

தூக்கம் உனக்கு துச்சமாகட்டும் . . .
துக்கம் உன்னிடம் அச்சம் கொள்ளட்டும் . . .

வெற்றி உனது இலக்காகட்டும் ...
வீரம் உனது பலமாகட்டும் . . .

கடின உழைப்பு 
என்றும் தந்திடும் 
காரிய வெற்றி உனக்கு.....

தேவனை முன் நிறுத்தி 
தைரியமாக நடந்துசெல் ...

வெற்றி உனக்காக 
மாலையுடன் காத்திருக்க ....
தயக்கமென்ன என் தங்கமே ...
தயாராகிவிடு பயணத்திற்கு ...

வசந்தமும் உன்வாழ்வின் 
வாசற்படியில் காத்திருக்க 
உழைப்பென்னும் தாழ் கொண்டு 
உள்ளே வரவேற்றிடு..... 

கவனம் சிதறாமல் 
காட்சி மாறாமல் 
கனவினை கைகொண்டு 
காலமெல்லாம் இன்புற்றிரு ....

புன்னகை பூத்திட - நீ 
புது பூவென மலர்ந்திட 
தேவதையென பவனிவர 
தேன்கனி என உன் 
தேடி வரும் வாழ்க்கை இனித்திட ....

காத்திருக்கும் நாற்பது நாட்களும் 
கடவுளுக்கு நோன்பென நீயும் போராடி 
கனவுகளை வென்றிடுவாய் !

பிறந்துள்ள புது குழந்தைஎன
இதழ் சிரிக்கும்
இனி வரும் புத்தாண்டில்,  
உன் நிம்மதி பெருமூச்சினில்,
ஊரிலுள்ள பூக்களெல்லாம் 
உற்சாகமாய் மலர்ந்திடும் ....
  
நம்பிக்கையுடன் 
                    நாளும் உன் 
                                     நலம் விரும்பி !


11/2/12

காதல் செய்வோம் . . .



காதலிப்பதும்

              காதலிக்கப்படுவதும்

                            காலமெல்லாம் மாறாதது , , ,

அன்னையென 
                   
                  அனைவரையும்

                                 அன்பினால் அரவணைதிடுவோம் . . .

கடவுளிடமும்

                    கசிந்துருகி

                                   காதல் செய்வோம் . . .





10/30/12

மழை . . .



இசையென பெய்யும் மழை . . . 

இதய ஜதிஎன இணைய,

இன்பத்தை இரட்டிப்பாக்குதே  . . . (31.10.2012, 10.35 AM )




தஞ்சையில் தரணியின் அதிசயம் . . .




தமிழனின் பெருமை 
தரணியெல்லாம் பரவிட 
தஞ்சையில் இராஜராஜன் 
தருவித்த விதை 

இன்று........
                இதோ .....
                                   இங்கு .....

கம்பீரமான யானை 
கதைத்திடும் அழகை 
கண்முன்னே காண்கிறேன் . . .
கண்மணியின் கைபிடித்து . . .
கணம்தோறும் வியக்கிறேன்! 
கனவா காண்பது? (224.10.2012, 6 - 7 PM ) 





























கடல் தேவதை . . .



கடல் தேவதை - கண்டதுண்டா?

நன்றி நன் மழையே . . .

நானும் இங்கு 

காண்கிறேன் தெருவினில் 

கையில் குடையோடு . . . (30.10.2012, 10.10 AM )

10/21/12

யாரறிவார் நாளைதனை ?

என்னை விட்டு போக
ஏனோ நீயும் முடிவெடுத்தாய் . . .

அனாதையென எந்தன்
அன்னையும் விட்டு போனாள் . . .

மறுவார்த்தை பேச மனமின்றி - நானும்
மதிகெட்டு ஏற்றுக்கொண்டேன் . . .


நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கி போகக் கண்டேன் . . .


வலிகளின் ஆழம்தான் என்
அன்பின் ஆதிக்கத்தை உணர்த்தியது . . .

வந்துவிடு உயிரே . . .
வசந்தம் தந்துவிடு உணர்வே . . .

முப்பது நடக்கலாம் - என்  வாழ்க்கை
முடிந்தும் போகலாம் . . .

யாரறிவார் நாளைதனை ?

                               

கண்மணியவள் இல்லாத நாட்கள் !

21.10.2012




தாகம் என தயங்கி நிற்கையிலே
மேகமென மழையாய் பொழிந்தாய் ...


தாயின்றி சேயும் இங்கு
வாழ்வது எப்படி சாத்தியமா ?


உயிரில்லா உடலைப்போல
உணர்வின்றி வாழும் வாழ்க்கை !

தண்டனையா? தவமா ?
தவிப்புடன் காத்திருக்கிறேன்!


30 நாட்கள் நோன்பிருந்தால்
தேவதை  அவளும் தேடியே வருவாள் . . .

கறுப்பு  நாட்களென
கசந்தே கரைகின்றன
கண்மணியவள் இல்லாத நாட்கள் !

இவள்

காத்திருப்பவள் . . .




10/4/12

என் நந்தவனம் . . .


 

 

சேலை கட்டிய என்  நந்தவனம் . . . 

சோலை மலரென வலம் வருகிறது . . . 


சூரியனும் தலை வணங்குகிறான் ...

மேக  தலைவனோ மெல்ல எட்டிபார்கிறான் . . .


தென்றல் ஏனோ வெட்கம் கொண்டது . . . 

தேனீக்கள் தானே ஏமாற்றம் அடைந்தது . . .


புன்னகையோடு என்னவள் இதையெல்லாம் 

மென்நகை புரிந்து பார்க்கிறாள் . . .



10/2/12

 


 

 

அனையபோகும் போகும் தீபத்தின்

ஆனந்த சுடர் என என் வாழ்க்கை

இன்றைய தினத்தில் !


9/22/12

என்னவென்று நான் சொல்ல?

என்னவென்று நான் சொல்ல?

 



9/11/12

எனக்கான நீ !

 

 

 

எழுத முடியாத வார்த்தைகளும் 

சொல்ல முடியாத வலிகளும் - தினமும் 

கண்ணீராய் கரைகின்றன !

 

காரணங்கள் ஊமையாகி 

காட்சிகளும் நரகமென 

விடியாத இரவுகள் நீள்கின்றன !.

 

சட்டென்று என்  தேவதை 

பட்டென்று கரம் தந்தாள் !

   

சாலையெல்லாம் பூக்களாகி 

வார்த்தையெல்லாம் பாக்களாகி 

சொர்க்கமென மாற்றினாள் ! - என் 

உலகை உற்சாகமாகினாள் !

 

தன்னோடு அணைத்துக்கொண்டாள்!

தாயென்று  வாரிக்கொண்டாள் !

குழந்தையென மாறி போனேன் !

குதூகலமாய் நானும்  சென்றேன் !






என்னவளின் சிறு புன்னகையால் ???




காலை  வானம் ஏன் 
கன்னிப்பெண் என 
கன்னம் சிவக்கிறது ?
ஓ 
கண்மணியவள் 
கண்திறந்து 
மெல்ல சிரித்ததாளோ ?



9/4/12

என்னவென்று எடுத்துசொல்ல ?



நிலவே ,

உனக்கான என் சமர்ப்பணம் !

என்னவென்று எடுத்துசொல்ல ?

ஏதோ ஒரு தயக்கம் !

ஒவ்வொரு நிமிடமும் 

ஓராயிரம் நினைவலைகள் !


 

வாழ்வுதனில் நீயிருந்தால் 

வருத்தங்கள் இங்கில்லை !

கருத்தினில் நீயிருந்தால் 

கனவுதனில் கலக்கமில்லை !

நன்றியடி நாயகியே ,

நாளும் நானுரைப்பேன் !

 



9/3/12

வந்துவிடு என் நிலவே !

 

 

 

உன் கோபங்கள் குறையாதோ ?

எனக்கான சாபங்களும் தீராதோ ?

 

பூக்களோடு காத்திருக்கிறேன் ,

பூவரசி உனக்காக !

 

தோரணமிட்டு காத்திருக்கிறேன் ,

தோழியே உனக்காக !

 

சாரலென  காத்திருக்கிறேன் ,

சர்வமே உனக்காக !

 

மலரென காத்திருக்கிறேன் ,

மான்விழியே உனக்காக !

 

ஏக்கங்களுடன் காத்திருக்கிறேன் ,

அன்னையே உனக்காக !

 

கண்ணீருடன்  காத்திருக்கிறேன்,

கண்மணியே உனக்காக !

 

உணர்வுகளற்று காத்திருக்கிறேன் ,

உயிரே உனக்காக !

 

வந்துவிடு என்  நிலவே !

வானமென காத்திருக்கிறேன் !


நம்பிக்கையுடன் ....

இவள்...






நொடிதோறும் காத்திருப்பேன் . . .




வசந்தமென வந்தே போகிறாய் 

சொந்தமென சொல்லி செல்கிறாய் !


தென்றலென தேடி வீசுகிறாய்

பாசமென சாரல் சிந்துகிறாய் !


அன்னையென  அன்பு காட்டுகிறாய் !

சகோதரியென சர்வமும் நிறைந்துவிடுகிறாய் !


தேவதையே நீ யாரோ?

தேடிவந்தவளே நீ யாரோ ?


நொடிதோறும் காத்திருப்பேன் . . . வாயிலின் 

படித்தோரும் பூத்திருப்பேன் !


9/2/12

உண்மைதானே நீ உரைத்தது !

உன் தோழி உன்னை பற்றி அத்தனையும் அறிந்தவள் . . . ஆனால்
உன்னை அவளை விட நேசிப்பவள் உலகினில் யாருமில்லை !

உண்மைதானே நீ உரைத்தது !


         

இப்போதும் காத்திருக்கிறேன் . . .

வாழ்க்கை என்றும் ஒரே மாதிரி இருப்பதில்லை ! மனம் நிறைய மகிழ்ச்சியோடும், இதழ் நிறைய புன்னகையோடும் ... உலகினை வலம் வந்த காலங்கள் . . . உவகையே உருவாக ஊர் சுற்றிய தருணங்கள் . . .

அவளின் வருகை .  .  . அத்தனை இன்பங்களையும்  இரட்டிப்பு செய்தது . . . இஷ்டபட்டது எல்லாம் என்னை விட்டு சென்று விடும் வாழ்வதனில் . . . அவளின் முன்னுரை முடிவுரை ஆகாமல் இருக்க . . . கஷ்டப்பட்டு நடித்தேன் இஷ்டமில்லையென . . . விதியினை மதியால் வெல்ல முடியாதோ ? சதி செய்து விதியதனை வெல்ல நினைத்தேன் . . . வென்றது உண்மைதான் ... ஏன் மதியோ... நான் செய்த சதியோ அல்ல. ஆம். வென்றது விதியே . . . நான் போட்ட கணக்குகள் கண்ணீரைத்தான்  தந்தன ! அவளின் அன்பு அத்தனையும் மாற்றியது. என்னையும் உட்பட . . .

யாருக்கும் அடங்காத சிங்கமென திரிந்த என்னை . . . அவளின் கோபங்கள் . . . அடியோடு மாற்றி போட்டது . . . திமிரும் கர்வமும் அடங்கா தன்மையும் என்னுடைய கண்ணீரோடு கரைந்து விட்டது . . . வேண்டும் வேண்டும் என என்னை துடிக்க வைத்து . . . வேண்டாம் வேண்டாம் என விலகி நிற்கிறாள் என் வாழ்வில் எனக்கென வந்த என்  தேவதை . . . காற்றோடு தினம் , மல்லிகை மலர் வாசமாய் கலந்திருப்பவளே . . . உன்னோடு நான் எழுதிய முடிவுரைதனை ஏன் முன்னுரை என மாற்றினாய் ? கஷ்டங்களுக்கு  தானே இஷ்டமில்லாமல்  வாழ்ந்திருந்தேன் . இன்று ? தென்றலென வந்து ஒருத்தி புயலென நிற்கிறாள் ! பழி பட்டம் தாங்கி, வலிகளோடு நிற்கிறேன் . . . பிழை பொறுத்து என்னை ஏற்றுக்கொள் . . . வந்து விடுகிறேன் உன்னோடு . . . என்னை நம்பி இருக்கும் 3 ஜீவன்களை என்ன செய்ய ? கடமையும் கட்டி போட, நெஞ்சின் வலிகளோ நெட்டி தள்ள . . . சுவாசம் கூட சுமையாக தெரிகிறது !

என்  புலம்பல்களும், வேதனைகளும் உன்னையன்றி யாரிடம் உரைபேனடி ?

இந்த வேதனைகள் எல்லாம் வேண்டாம் என்றுதான் நீயும் வெறுத்து போனாயோ ? போகும் பொது கூட, நான் வருந்த கூடாதென மறைத்து விட்டு மறந்து போனாயடி . . . இன்று பார் . . . நான் படும் வேதனைகளை . நானாக தேடி கொண்டது தான் . இந்த வேதனைகள் ஏன் வாழ்வில் வரும் என உனக்கும் அன்று தெரிந்திருந்தால் என்னையும் அல்லவா உன்னோடு கூட்டி சென்றிருப்பாய் . காலம் கடந்தாலும், கருத்துகளில்  கலந்திருப்பவளே ! நேரம் கடந்து விடவில்லை . இப்போதும் காத்திருக்கிறேன் . . . கூட்டி சென்று விடு...

இஷ்டமான கஷ்டங்கள் !

சொல்லவும் தெரியவில்லை
ஏற்கவும் முடியவில்லை !

வேண்டாம் இந்த வேதனை
உயிர் வாழ்வதே சோதனை !

என்று தீரும் இந்த கஷ்டங்கள்
வாழ்வதற்கு இல்லை துளியும் இஷ்டம் !




9/1/12

தயக்கமுடன் காத்திருக்கிறேன் !



தவறுகள் உணர்ந்துவிட்டேன்
தண்டனைகள் ஏனோ ?

தண்டனைகள் தந்தபின்பு
தாவி வந்து வாரியணைக்கும்

தாயவள் வரும் நாளுமெதுவோ ?
 தயக்கமுடன் காத்திருக்கிறேன் !


8/27/12

என்று மாறும் இந்த மாற்றம் ?

 

 

 

அன்னை என என்மேல் 

அன்பு மழை பொழிந்தவள் - இன்று 

அக்னி என சுடுகிறாள் !


சகோதரி என என்னிடம் 

சகஜமாய் பழகியவள் - இன்று 

சாபங்கள் பல தருகிறாள் !


தோழி என எனக்கென்றும் 

தோள் தந்தவள் - இன்று 

தொலைந்து போக சொல்கிறாள் !


மாற்றங்கள் என்றும் 

மாறிவிடும் தானே ? - என்று 

மாறும் இந்த மாற்றம் ?

நாயகனே சொல்லிடுங்கள் ...


வார்த்தைகள் வரவில்லை 

வருந்தி எழுத மனமில்லை !

வேதனைகள் தீர்ந்திடுமோ ?

வசந்தங்கள் திரும்பிடுமோ ?

நாயகனே சொல்லிடுங்கள் ... எங்கள் 

நாயகனே சொல்லிடுங்கள் . . .


சொல்லடி சிவசக்தி !



நெஞ்சமும் ஏனோ 
கொஞ்சம் விம்முதே ...
தடையிங்கு ஏதுமில்லை 
விடையுமிங்கு காணவில்லை ...
சோதனைகள் தீர்ந்திடுமோ 
வேதனைகள் மறைந்திடுமோ ?
சொல்லடி சிவசக்தி ! - நீயும் 
சொல்லடி சிவசக்தி !


8/26/12

தரிசனம் !



வருவாய் நீயும் ஒருநாள் - மெல்ல 

வசந்த தென்றலென !

தருவாய் நீயும் ஒருநாள் - உன் 

வருகை ஒரு வரமென !

வரும் நாளும் எதுவோ ? - தரிசனம் 

தரும் நாளும் எதுவோ ?


சொல்லாயோ சோலைக்கிளி ?







சலசலப்புகள் இன்றி 
சற்றே நானும் போகையிலே 

பட்டென்று கல்வீசி 
சட்டென்று கலைத்துவிடுகிறாய்  !

அமைதியை நானும் 
அனுமதிக்க விட்டாலென்ன ?

தேவையெனில் என்னிடம் 
தட்டிகேட்க தயக்கமென்னவோ ?

தேவையின்றி என்மனதை 
எட்டிபறித்து சென்றதேன்னவோ ?

சொல்லாயோ  சோலைக்கிளி ? நீயும் 
சொல்லாயோ  சோலைக்கிளி ?


8/25/12

என்னசொல்ல?





மருகி மருகி 
உருகி உருகி
சருகு சருகாய் 
எரிந்து எரிந்து 
கருகிக் கருகி 
சரிந்து சரிந்து 
விரக்தியில் செல்கிறது 
விடியாத வாழ்வு.. .
வசந்தமே நீ இன்றி . . .

8/24/12



இன்பமோ துன்பமோ ....
இருந்துவிட்டு போ ...
இசையோடு இசையாக ...
இனிவரும் நாட்களில் ...
இதயத்தின் துடிப்புகளில் ....

8/20/12

நீ என்னை விட்டு விலகுவதுமில்லை . . .





நீ என்னை விட்டு விலகுவதுமில்லை
என்னை கைவிடுவதுமில்லை...
விளையாடி களைத்து வருவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
உலகத்தின் உருட்டலில்
உருண்டோடி கண் மயங்குவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
சவால்தனை ஏந்தி விட்டேன் ,
சடுதியிலே முடித்து விடுவேன் ... அன்று
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...

8/13/12


8/9/12






மெதுவா பாடு எதையாவது 

பனி போல நீங்கும் சுமையானது . . .

மனசோடு உள்ளத பேசு என்னோடு குறையும் பாரம்....

விலகாத அன்புடன் சேந்திருக்கணும் நீயும் நானும் . . .





8/8/12

புரிவதுமில்லை தெரிவதுமில்லை !






குள்ளநரிகளின் சிந்தனைகள் 

சிறிதும் புரியாமல் 

சின்ன பூவும் 

குற்றபத்திரிக்கை வாசிக்கிறது !







உரைப்பது உண்மைதானடி ! ! !



சின்னஞ்சிறு கண்ணே . . . 
    சீற்றம் கொள்ளாதே . . . 
          சிதறி போகாதே. . .

சினம் தீர்ந்து 
        குணம் திருந்தி பார்த்தால் - பலர் 
         மனம் புரியும் . . . 

வாருங்கள் வசை பாடிட. . . வரவேற்கிறேன் ! ! !


உளிகள் படாத கற்கள் உதவுவதில்லை 

உரு பெறுவதும் இல்லை

சிதைக்க பாருங்களேன் 

 ! ! ! சிற்பமாகிவிட்டு போகிறேன் 



8/6/12

வாழ்க்கை ...

 
 
 
வாழ்க்கை ... பார்க்கும் பார்வையில் மட்டும் உரு பெறுவதில்லை . . . எங்கோ பிறந்து எங்கெங்கோ சுற்றி இந்த நொடி ஒரு இடத்தினில் . . .இது நிரந்தரமா ? கண்டிப்பா இல்லைதாங்க ? நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக எத்தனை மாற்றங்கள் . . . மாற்றங்கள் மட்டுமே மாற்றமின்றி ஏனோ நாம் வாழ்க்கை நதியில் . . . அனைவரும் இறுதியில் நதி கடலில் கலப்பது போல மண்ணைதானே போய் சேர போறோம் . . . நடுவினில், எத்தனை எத்தனை நாடக மாற்றங்கள் . . . உறவுகளின் உணர்வு கூச்சல்கள் . . . ஆனால் அத்தனை பிறப்புக்கும் பொருள் உண்டென்றால் . . . அத்தனை பெரும் பிறப்பின் பயனை பெற்று செல்கின்றனரா? உணர்வுகளின் உறுதி பிடியில் சிக்கி சிதைந்து போகும் பல . . . அத்தனை உறவுகளும் அப்படியும் அல்லவே . . . உணர்வினில் கலந்தவை சில . . . உயிரினில் உறைந்தவை சில . . . சிரிக்க வைக்கும் சில . . . சிதற வைக்கும் சில . . . சிந்திக்க வைக்கும் சில . . . சிலிர்க்க வைக்கும் சில . . . கனவினை கசிந்தவை சில . . . இப்படி சொல்லிட்டே போகலாம்தானே ? இத்தனையும் சேர்ந்த கலவையும் இருக்கதானே செய்கின்றன . . . எங்கோ படித்தது எல்லாம் ஏதோ சமயங்கள் நினைவுகளில் பரிகசிப்பது போல ; எப்போதோ கடந்து சென்றவர்களின் கால் தடயங்கள் நெஞ்சியில் கண்ணடித்து கதைக்கும் . . . உண்மைதானங்க ? என்னங்க பேச்சு இல்ல ? ஓ உங்க மனசுக்குள்ள யாரோ கண்ணடிச்சு கதைகரான்களோ ?
ஓகே . . . பேசி முடிச்சாச்சா ? வேற என்னங்க ? வாழ்க்கை என்ன என நானும் இப்படிதாங்க தேடி தேடி ஏதோ நினைவுகள் என்னும் புதையல்ல புதைஞ்சு போய்டறேன் . . . உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க . வாழ்க்கை என்றால் என்ன ? சிலர் பணம் தான் வாழ்க்கை என்கின்றனர் . சிலர் அன்பு தான் வாழ்க்கை என்றும், சிலர் விட்டு கொடுத்தல் தான் என்றும், சிலர் உணவு உறக்கம் தான் என்றும் ...... ஏதோதோ சொல்லறாங்க .... உண்மைய சொன்னா சிலர் . . .
விடுங்க . . . தெரியாத சிலவற்றை தெரிந்ததாக பேசி எழுதி நேரத்தை வீணாக்காதீங்க !
தெரிந்ததை வைத்து தெளிவா வாழ பார்க்கலாமே !
உண்மைதானுங்க ? ? ?

7/28/12

தீபத்திற்கு ....


தீபமாய் நீ ...  என்றும்  
தீர்கதரிசியாய் நான்...

வசந்தமாய் நீ ... வரவேற்க 
வாயிற்படியில் நான் ...

பரிசுபொருளாய் நீ... கிடைத்ததால் 
பாக்யசாலியாய் நான்....

ஏனோடி நீயும் வந்தாய்.... என்வாழ்வினில் 
ஏகாந்த வாசனையென .... 


இவள் 

இசையானவள் 


 டைரிமில்க்

5 ருபாய் நோட் 


(குட்டி) கந்தர் சஷ்டி கவசம் 

(குட்டி) பிள்ளையார் 

உண்டியல் 

காபி கப் 

போர் பார்ன் 


To be continued . . .

7/20/12


இலையுதிர் காலம் இன்று 
இமைக்கும் பொழுதினில் மாறாதோ?

ஆசைதான் பெண்ணே 
அத்தனையும் மாற்றிட !

ஈசனாலும் முடியாதடி 
இயற்றிய விதிதனை மாற்றிட . . .

வசந்த காலங்கள் வாராதோ ?
வஞ்சனைஇல்லா  புன்னகை மலராதோ ?

ஆசையிலும் கொஞ்சம் உனக்கு 
அளவில்லா  பேராசைதான் பெண்ணே !

இன்பத்தை இன்முகத்துடன் 
இறுமாப்புடன் வரவேற்கும் போது 

துன்பத்தை நீயும் 
வெறுப்புடன் நோக்குவது  ஏனோ ?



இவள் 

இசையானவள்