, இனியவளின் இதய பகிர்வுகள் !: எனக்கான நீ !
Views

9/11/12

எனக்கான நீ !

 

 

 

எழுத முடியாத வார்த்தைகளும் 

சொல்ல முடியாத வலிகளும் - தினமும் 

கண்ணீராய் கரைகின்றன !

 

காரணங்கள் ஊமையாகி 

காட்சிகளும் நரகமென 

விடியாத இரவுகள் நீள்கின்றன !.

 

சட்டென்று என்  தேவதை 

பட்டென்று கரம் தந்தாள் !

   

சாலையெல்லாம் பூக்களாகி 

வார்த்தையெல்லாம் பாக்களாகி 

சொர்க்கமென மாற்றினாள் ! - என் 

உலகை உற்சாகமாகினாள் !

 

தன்னோடு அணைத்துக்கொண்டாள்!

தாயென்று  வாரிக்கொண்டாள் !

குழந்தையென மாறி போனேன் !

குதூகலமாய் நானும்  சென்றேன் !






No comments:

Post a Comment