, இனியவளின் இதய பகிர்வுகள் !: இப்போதும் காத்திருக்கிறேன் . . .
Views

9/2/12

இப்போதும் காத்திருக்கிறேன் . . .

வாழ்க்கை என்றும் ஒரே மாதிரி இருப்பதில்லை ! மனம் நிறைய மகிழ்ச்சியோடும், இதழ் நிறைய புன்னகையோடும் ... உலகினை வலம் வந்த காலங்கள் . . . உவகையே உருவாக ஊர் சுற்றிய தருணங்கள் . . .

அவளின் வருகை .  .  . அத்தனை இன்பங்களையும்  இரட்டிப்பு செய்தது . . . இஷ்டபட்டது எல்லாம் என்னை விட்டு சென்று விடும் வாழ்வதனில் . . . அவளின் முன்னுரை முடிவுரை ஆகாமல் இருக்க . . . கஷ்டப்பட்டு நடித்தேன் இஷ்டமில்லையென . . . விதியினை மதியால் வெல்ல முடியாதோ ? சதி செய்து விதியதனை வெல்ல நினைத்தேன் . . . வென்றது உண்மைதான் ... ஏன் மதியோ... நான் செய்த சதியோ அல்ல. ஆம். வென்றது விதியே . . . நான் போட்ட கணக்குகள் கண்ணீரைத்தான்  தந்தன ! அவளின் அன்பு அத்தனையும் மாற்றியது. என்னையும் உட்பட . . .

யாருக்கும் அடங்காத சிங்கமென திரிந்த என்னை . . . அவளின் கோபங்கள் . . . அடியோடு மாற்றி போட்டது . . . திமிரும் கர்வமும் அடங்கா தன்மையும் என்னுடைய கண்ணீரோடு கரைந்து விட்டது . . . வேண்டும் வேண்டும் என என்னை துடிக்க வைத்து . . . வேண்டாம் வேண்டாம் என விலகி நிற்கிறாள் என் வாழ்வில் எனக்கென வந்த என்  தேவதை . . . காற்றோடு தினம் , மல்லிகை மலர் வாசமாய் கலந்திருப்பவளே . . . உன்னோடு நான் எழுதிய முடிவுரைதனை ஏன் முன்னுரை என மாற்றினாய் ? கஷ்டங்களுக்கு  தானே இஷ்டமில்லாமல்  வாழ்ந்திருந்தேன் . இன்று ? தென்றலென வந்து ஒருத்தி புயலென நிற்கிறாள் ! பழி பட்டம் தாங்கி, வலிகளோடு நிற்கிறேன் . . . பிழை பொறுத்து என்னை ஏற்றுக்கொள் . . . வந்து விடுகிறேன் உன்னோடு . . . என்னை நம்பி இருக்கும் 3 ஜீவன்களை என்ன செய்ய ? கடமையும் கட்டி போட, நெஞ்சின் வலிகளோ நெட்டி தள்ள . . . சுவாசம் கூட சுமையாக தெரிகிறது !

என்  புலம்பல்களும், வேதனைகளும் உன்னையன்றி யாரிடம் உரைபேனடி ?

இந்த வேதனைகள் எல்லாம் வேண்டாம் என்றுதான் நீயும் வெறுத்து போனாயோ ? போகும் பொது கூட, நான் வருந்த கூடாதென மறைத்து விட்டு மறந்து போனாயடி . . . இன்று பார் . . . நான் படும் வேதனைகளை . நானாக தேடி கொண்டது தான் . இந்த வேதனைகள் ஏன் வாழ்வில் வரும் என உனக்கும் அன்று தெரிந்திருந்தால் என்னையும் அல்லவா உன்னோடு கூட்டி சென்றிருப்பாய் . காலம் கடந்தாலும், கருத்துகளில்  கலந்திருப்பவளே ! நேரம் கடந்து விடவில்லை . இப்போதும் காத்திருக்கிறேன் . . . கூட்டி சென்று விடு...

No comments:

Post a Comment