, இனியவளின் இதய பகிர்வுகள் !: வாழ்க்கை ...
Views

8/6/12

வாழ்க்கை ...

 
 
 
வாழ்க்கை ... பார்க்கும் பார்வையில் மட்டும் உரு பெறுவதில்லை . . . எங்கோ பிறந்து எங்கெங்கோ சுற்றி இந்த நொடி ஒரு இடத்தினில் . . .இது நிரந்தரமா ? கண்டிப்பா இல்லைதாங்க ? நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக எத்தனை மாற்றங்கள் . . . மாற்றங்கள் மட்டுமே மாற்றமின்றி ஏனோ நாம் வாழ்க்கை நதியில் . . . அனைவரும் இறுதியில் நதி கடலில் கலப்பது போல மண்ணைதானே போய் சேர போறோம் . . . நடுவினில், எத்தனை எத்தனை நாடக மாற்றங்கள் . . . உறவுகளின் உணர்வு கூச்சல்கள் . . . ஆனால் அத்தனை பிறப்புக்கும் பொருள் உண்டென்றால் . . . அத்தனை பெரும் பிறப்பின் பயனை பெற்று செல்கின்றனரா? உணர்வுகளின் உறுதி பிடியில் சிக்கி சிதைந்து போகும் பல . . . அத்தனை உறவுகளும் அப்படியும் அல்லவே . . . உணர்வினில் கலந்தவை சில . . . உயிரினில் உறைந்தவை சில . . . சிரிக்க வைக்கும் சில . . . சிதற வைக்கும் சில . . . சிந்திக்க வைக்கும் சில . . . சிலிர்க்க வைக்கும் சில . . . கனவினை கசிந்தவை சில . . . இப்படி சொல்லிட்டே போகலாம்தானே ? இத்தனையும் சேர்ந்த கலவையும் இருக்கதானே செய்கின்றன . . . எங்கோ படித்தது எல்லாம் ஏதோ சமயங்கள் நினைவுகளில் பரிகசிப்பது போல ; எப்போதோ கடந்து சென்றவர்களின் கால் தடயங்கள் நெஞ்சியில் கண்ணடித்து கதைக்கும் . . . உண்மைதானங்க ? என்னங்க பேச்சு இல்ல ? ஓ உங்க மனசுக்குள்ள யாரோ கண்ணடிச்சு கதைகரான்களோ ?
ஓகே . . . பேசி முடிச்சாச்சா ? வேற என்னங்க ? வாழ்க்கை என்ன என நானும் இப்படிதாங்க தேடி தேடி ஏதோ நினைவுகள் என்னும் புதையல்ல புதைஞ்சு போய்டறேன் . . . உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க . வாழ்க்கை என்றால் என்ன ? சிலர் பணம் தான் வாழ்க்கை என்கின்றனர் . சிலர் அன்பு தான் வாழ்க்கை என்றும், சிலர் விட்டு கொடுத்தல் தான் என்றும், சிலர் உணவு உறக்கம் தான் என்றும் ...... ஏதோதோ சொல்லறாங்க .... உண்மைய சொன்னா சிலர் . . .
விடுங்க . . . தெரியாத சிலவற்றை தெரிந்ததாக பேசி எழுதி நேரத்தை வீணாக்காதீங்க !
தெரிந்ததை வைத்து தெளிவா வாழ பார்க்கலாமே !

No comments:

Post a Comment