, இனியவளின் இதய பகிர்வுகள் !
Views

7/20/12


இலையுதிர் காலம் இன்று 
இமைக்கும் பொழுதினில் மாறாதோ?

ஆசைதான் பெண்ணே 
அத்தனையும் மாற்றிட !

ஈசனாலும் முடியாதடி 
இயற்றிய விதிதனை மாற்றிட . . .

வசந்த காலங்கள் வாராதோ ?
வஞ்சனைஇல்லா  புன்னகை மலராதோ ?

ஆசையிலும் கொஞ்சம் உனக்கு 
அளவில்லா  பேராசைதான் பெண்ணே !

இன்பத்தை இன்முகத்துடன் 
இறுமாப்புடன் வரவேற்கும் போது 

துன்பத்தை நீயும் 
வெறுப்புடன் நோக்குவது  ஏனோ ?



இவள் 

இசையானவள் 

No comments:

Post a Comment