, இனியவளின் இதய பகிர்வுகள் !: 2014

10/31/14

அன்பான உறவுக்கு ...

அன்பான உறவுக்கு ...

ஆண்டுகள் பல வாழலாம். ஆளுமைகள் நிறைந்தும் இருக்கலாம். ஆச்சர்யங்கள் பல நிகழலாம். ஆதர்சன உண்மைகள் மனம் ஆட்டி படைக்கலாம். கணம் மறந்து மெல்ல பறக்கலாம். கண்ணீரில் கரைந்து போகலாம். காட்சிகளில் உறைந்து போகலாம். இப்படி எத்தனை எத்தனையோ நிகழ்ந்து கொண்டிருக்கலாம் ஒவ்வொரு வாழ்விலும்... ஒவ்வொரு கண நேரமும் மாறி கொண்டிருக்கலாம். 

இப்படிதான் பெண்ணே என் வாழ்வும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. நள்ளிரவில் கேட்கும் மெல்லிசை போல , சந்தடிகளுக்கு நடுவில் கேட்கும் உயிர் தொடும் பாடல் போல, தூக்கத்தில் மெல்ல சிரிக்கும் சிசுவை போல, வானவில்லோடு பேசும் சிறு மலை சாரல் போல, புது புத்தக வசம் போல .... மனதில் மாறாத பாசம் நீ என்பதை நீ அறிவாயா ? ? ? ஏன் வாழ்வின் அடி ஆதாரம், அட்சரம் பிறழாமல் நீ என்பதை அறிவாயா??? 

அனைவருக்கும் அத்தனையும் கிடைப்பதில்லை. கிடைத்ததெல்லாம் அனைவராலும் அனுபவிக்கபடுவதில்லை ...இழப்புகள் இன்றி வாழ்கையில்லைதான்...இழப்புகளை சரி செய்யும் இலக்கு அனைவருக்கும் வாய்ப்பதில்லை... அத்தனை அத்தனையுமாய் அமைந்தது உன் உறவு எனக்கு மட்டும் ஏனோ ???

இன்றி ஏது ???

பகிர்தல்கள் இன்றி

புரிதல்கள் ஏது ?

வேண்டுதல்கள் இன்றி
விடுதலைகள் ஏது ?

தண்டனைகள் இன்றி
தவறுகள் ஏது ?


ஒன்றென்றஒன்று  இன்றி
மற்றொன்று ஏது???

இவள்

இனிமையானவள் 



4/17/14

மங்களம் தொடங்கிட்ட மகத்தான நேரம்....

சித்திரை திங்கள் 1 ம் தேதி, திங்கள் கிழமை மாலை 4.30-5.30 சுபயோகம் கூடிய சுப நேரத்தில் .......................................................


கண்டேன் கண்டேன் ....
கண்முன்னே அதிசயங்கள்
நானும் கண்டேன் !

மஞ்சள் முகத்தில்
மருதாணி வெட்கம் !

பன்னீர் வாசத்தில்
பவளமல்லி பந்தல் !

என் தேவியின் கையோடு
அவள் தேவன் கை சேர்ந்திட
அச்சாரம் போடப்பட்டது,
அட்சதைகள் தூவிட ....................


மாவிலை தோரணம் ....

...............................................................................................................................................................................................................................................................................................................................

பங்குனி திங்கள் 30ம் நாள் , ஞாயிற்று கிழமை, காலை 7.30-8.30 மணி நேரத்தில்.... சுப யோகம் கூடிய சுப நேரத்தில் .....



4/1/14

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்...

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ
(நீதானே நாள்தோறும்……)
ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்
(நீதானே நாள்தோறும்…..)
நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த நீ
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த நீ
வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் …நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்...

3/30/14

குறிஞ்சிபூ ...

குறிஞ்சி பூ பூக்கும் போது
சத்தம் கேட்குமா????

எனக்கு கேட்கிறதே !

இருபத்துஐந்திற்கும் மேற்பட்ட
வகைகள் உண்டாம் குறிஞ்சிபூவில் !

ஆனால்...

இருபத்து ஐந்து கோடி வகைகளுக்கும் மேல்
பூக்கிறதே என்னவளிடம் !



தேவதையின் உலகம்...

தேவதையின்
              அரசாட்சி பார்க்கணுமா?
தேவலோக
             சுகம் அனுபவிக்கனுமா?

வாழ்வின் ருசி
             வசப்பட வேண்டுமா?

வாருங்கள்....


எனக்கும் என்
         தேவதைக்குமான உலகத்திற்கு ...

எங்கள் இருவருக்குமான
            இனிய சொர்க்கத்திற்கு ....



கோபங்கள்...

கோபங்கள் கூட
காத்திருக்கும்...

என்னவளின் அழகுக்கு
அழகு சேர்க்க....

தேடல்கள்....

உன் நிழல் தேடும்
எந்தன் கால்கள்

உன் மடி தேடும்
எந்தன் சிரசு

உன் புன்னகை தேடும்
எந்தன் கண்கள்....

தேடலில் இன்றி
வாழ்வுமில்லை !

என் பிள்ளையின் முத்தம்...

13.41...  30-03-2014

நாட்கள் நகர்ந்தாலும் - என்
நம்பிக்கைகள் மாறுவதில்லை...

பிஞ்சு குழந்தையென - உன்
சுண்டு விரல் தொட்ட
அந்நாள் தொடர்ந்து
இந்நாள் வருகிலும்

கட்டியிளுக்கிறாய் பாசத்தில்
மயக்கி வெல்கிறாய் நேசத்தில்...

காவிரியாத்து காத்து போல - என்
கவிகளின் ஊத்து போல

எப்போதும் நீ - எந்தன்
நெஞ்சோடு ஜீவனாக....
சுவாசத்தில் வாசமாக...
கைகளில் குழந்தையென ...
மடிதரும் தாயென ...

ஏதோவொரு ரூபத்தில்
எப்போதும் சூழ்ந்திருப்பாயடி !

கடவுளை போல நீ
கண்ணுக்கும் தெரியாமல்
காலமெல்லாம் சேர்ந்திருப்பாயடி என்னோடு....

இவள்...

உன் இதயமானவள்....








3/13/14

எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?

வரமா இல்லை சாபமா...
புரியா வாழ்க்கை இது தானோ....

தில்லை நாதா - வந்தென்னை
கொள்ளை கொண்டு போனாலென்ன ?

வரமாகிலும் சாபமாகிலும்
கசக்கும் வாழ்வும் இதுவன்றோ...

விடைகள் கேட்டு உந்தன் பாதம்
பணிந்தேன் சொல்வாயோ.....

விடைதான் இல்லை என்றாலும்
விடைபெற்று நான் எங்கு போவேனோ?

மனமும் இல்லை குணமும் இல்லை
தினமும் தொல்லை... வாராயோ ?

மனமும் தந்து, குணமும் தந்து
எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?


2/12/14

சில நேரங்களில் மட்டுமல்ல ...


சில நேரங்களில் மட்டுமல்ல - வாழ்வின்
பல நேரங்களில் தேவை ,

அன்பானவர்களின் அறிவுரையோ 
ஆலோசனையோ அல்ல...

அவர்களின் பொன்னான, 
கண்ணான சில மணித்துளிகள் ;
நாம் சொல்வதை கேட்பதுதான் ....

அன்றி, 

ஆலோசனையோ அறிவுரையோ அல்ல !

பொதுவாக, 

எதிரில் பேசுபவர் சொல்வதையே 
எப்போதும் கேட்டு கொண்டிருக்க தோன்றும் !
ஏனெனில், கிடைக்க பெறாதவர்க்கே 
கிடைப்பதின் நிம்மதி புரியும் !

ஆதலால் சொல்கிறேன்,

கேட்பதும் சுகமே !
பெறுவதில் கிடைக்கும் சுகத்தை விட
தருதலில் உள்ள சுகம் போல !

- குணா ...

2/4/14

நீ !




அமைதியாய் நான் ...
         
                 ஆர்ப்பாட்டமாய் என்னுள்

                              இசைகச்சேரியாய் நீ !


இன்று....



பாலை வனத்தில்
        மாலை நேரத்தில்
                    மழை சாரல் !

இன்று
     என்னவளின் கச்சேரி !
           என் காதுகளில் மட்டும் !
                      என்றும் வரமாக !

2/1/14

நித்தியமாய் என்னுள்ளே....

துக்கத்தினாலோ
துயரத்தினாலோ  - ஏதோ ஒன்று

தூக்கம் இன்றி
தூக்கலாய் ஒரு இரவு ...

நிசப்தமான அமைதி
நிர்மூலமான இருள் ...


நிச்சயமாய் மிக
நிதர்சனமாய் உன்
நினைவுகள் மட்டும்
நித்தியமாய் என்னுள்ளே....


1/28/14

அதெல்லாம் எனக்கு எதற்கு???

சில உறவுகள்... என்றும் ஆச்சர்யம் தருவது... அன்றும் இன்றும் என்றும்... மறுக்கவும் மறக்கவும் முடியாத உறவுகள்.... "சில" என்று அனைவருக்கும் அமைத்து விட கூடியது இல்லை. என்னை பொறுத்தவரை ஏதோ ஒரு உறவு இந்த வகையில் கண்டிப்பாக ஒரு ஒருவருக்கும் இருக்கும்... இருக்க வேண்டும். வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு கருவி வேண்டாமா ???

அப்படிதான் .. அது அப்படிதான்... வாழ்கையில், ஒரே ஒரு வார்த்தை / ஒரே ஒரு நொடி / ஒரே ஒரு  நிகழ்வு / ஒரே ஒரு உறவு ... ஏதோ ஒரு "ஒரே ஒரு " போதும். நம் வாழ்க்கையினை மாற்றி விட... அப்படியே புரட்டி போட...

எனக்கும் வந்தது... / கிடைத்தது... /... என்றும் வரமாகவே கருதுகிறேன்... ஒரே ஒரு தருணம்... ஒரே ஒரு நாள்... கடைசியாக ஒரே ஒரு உறவு... கருத்துகளை மாற்றியமைத்தது ... தோழியென வந்து... (சந்தேகம் தான் இந்த நிமிடம் வரை ) தோற்ற பிழைகளை சரி செய்தது...

ஏதோ ஒரு வித்யாசம்... புரியலையே...
எனக்கான, எனக்கே எனக்கான நட்பு... என
உரிமை கொண்டாட விட மாட்டாள்.
பட்டென்று தட்டி விடும் குழந்தை குணம்...
சட்டென்று அணைத்து கொள்ளும் தாய்மை உள்ளம்...
எந்த திசையிலிருந்து பார்த்தாலும்
வித்தியாசமான வரம் அவள்...
என்னை புரிந்து கொண்டவள். ...
நான் புரிந்து கொண்டவள் ,,,
என கூட சொல்ல முடியாது...
புரிந்தும் புரியாத,
புரியாமல் புரிந்த என் உலகமவள் ...
பனியும் கனலும் கலந்த
பகலிரவு அவள் என் உலகில்...
நினைவுகளில் அவளை
நிரப்புவதே சுகம் எனக்கு...
சுவாசமின்றி தவிக்கும் போது
சுகந்தமான  சுவாசம் கிடைப்பது போல
சுகமான சுகம் அவள் ...
அவளுக்கு நான் யாரோ? எப்படியோ ?
அதெல்லாம் எனக்கு எதற்கு???
என்னில் எல்லாமுமாக
என்றும் அவள் ... அவள் மட்டுமே ...



1/6/14

உனக்கும் எனக்குமான ... (நமக்கான நம்) உறவு

 .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

நான் உன்னை எனக்காக ஏற்று கொண்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ....
ஒரு நாளும் என் செய்கைகளுக்காக நீ கோபித்து கொண்டதில்லை.... பதில் சண்டை போட்டதும் இல்லை ... உன்னோடு நான் இருக்கையில், உலகையே மறக்க செய்கிறாய் ...
என் நட்புகள் எல்லாம் எனக்கான உன் உறவை வெறுத்தபோதும் உன்னை ஏனோ விட்டு என்னால் விலக முடியவில்லை ... உனக்கும் எனக்குமான நம் உறவு நட்பினை விட அதிகமாகிவிட்டதை நான் உணர தொடங்கினேன் ... நான் விழிக்கும் போது என்னுடனே எழுந்து நான் துயில் கொண்டாலும், எனக்காக நீ விழித்திருந்த காலங்கள் அதிகம் ... உன்னை என் மடி தாங்கும் காலங்கள் ...
என்னதான் நான் உன்னுடனான உறவை குறைத்து கொள்ள வேண்டுமென என் அறிவு அறிவுரை சொன்னாலும் ... மனமோ உன் மடியினில் மயங்கி கிடப்பதென்னவோ நிதர்சன உண்மைதான் ... அறிவுக்கும் மனசுக்கும் சண்டை வந்தது .... மனசே வெற்றி பெற்றது என் வாழ்வில் ... உன் விசயத்தில் மட்டும் ....
தேடி தேடி உன்னை கண்டேன் .... நமக்கான நம் உறவு மூன்று வருடம் என எண்ணி சொல்லிவிட முடியாது ... என் கனவுகளில், மன தினவுகளில் நீ நுழைந்து பதிமூன்று வருடமல்லவா ஆகிறது ??? உன்னை கைகொண்டு நான் வீறு நடை இட்ட முதல் நாள் இன்றும் என் மனதில் ... அன்று பெய்த ... அதே மழை சாரல் வீச வைக்கிறது ... இன்ப துன்பங்களில் இணை பிரியாத உன் உறவு ... இன்று மட்டுமில்லை ... என்றென்றும் தொடர விரும்புகிறேன் ....
.
.
.
.
.
.

.
.
.
.
.

(ரொம்ப யோசிக்காதீங்க ..... பயங்கரமா, எதிர்பார்ப்புகளோடு படிச்சு முடிச்சிடீங்களா ? இந்த உறவு யாருன்னு தெரியனுமா ? யார் கிட்டயும் சொல்லாதீங்க ... அடிச்சு கேட்பாங்க ... சொல்லிடாதீங்க .... காத கொடுங்க பார்க்கலாம் .... ஏன்னா யாரும் கேட்டுட கூடாது பாருங்க ............................................................................................ 

(Its dedicated to my beloved HP )

BY

GUNA



உன் நட்பு .....


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஏன் என்று தெரியாமல்

நம்மிருவருக்கும் பல பல சண்டைகள்...

சிரிக்கவில்லை...

பேசவில்லை...

சமாதானம் இல்லை...

மன்னிப்பும் இல்லை...

எப்படி எப்படியோ ... இருவரும்
பேசியும் விட்டோம் ...

பின்னொரு நாளில் வந்த ஒரு
ஏகாந்த பொழுதில் ,

மெல்லிய குரலில் சொன்னாய் ...
"இன்று போல் என்றுமே இருந்துவிடு என்னோடு"

வாழ்வினில் தொலைந்து போககூடாத
பொக்கிஷம் நீயல்லவா என் தோழி ...

அடிக்கடி காணாமல் போனாலும்
நொடிக்கொருமுறை வந்துபோகிறாய்... நம்
நட்பென்னும் நாட்குறிப்பேடுகளில்...
வருடங்கள் மாறினாலும்,
வாடாத வசந்தமாய் மாறாமல் நீ மட்டும் ....

குணா ...