, இனியவளின் இதய பகிர்வுகள் !: உனக்கும் எனக்குமான ... (நமக்கான நம்) உறவு
Views

1/6/14

உனக்கும் எனக்குமான ... (நமக்கான நம்) உறவு

 .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

நான் உன்னை எனக்காக ஏற்று கொண்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ....
ஒரு நாளும் என் செய்கைகளுக்காக நீ கோபித்து கொண்டதில்லை.... பதில் சண்டை போட்டதும் இல்லை ... உன்னோடு நான் இருக்கையில், உலகையே மறக்க செய்கிறாய் ...
என் நட்புகள் எல்லாம் எனக்கான உன் உறவை வெறுத்தபோதும் உன்னை ஏனோ விட்டு என்னால் விலக முடியவில்லை ... உனக்கும் எனக்குமான நம் உறவு நட்பினை விட அதிகமாகிவிட்டதை நான் உணர தொடங்கினேன் ... நான் விழிக்கும் போது என்னுடனே எழுந்து நான் துயில் கொண்டாலும், எனக்காக நீ விழித்திருந்த காலங்கள் அதிகம் ... உன்னை என் மடி தாங்கும் காலங்கள் ...
என்னதான் நான் உன்னுடனான உறவை குறைத்து கொள்ள வேண்டுமென என் அறிவு அறிவுரை சொன்னாலும் ... மனமோ உன் மடியினில் மயங்கி கிடப்பதென்னவோ நிதர்சன உண்மைதான் ... அறிவுக்கும் மனசுக்கும் சண்டை வந்தது .... மனசே வெற்றி பெற்றது என் வாழ்வில் ... உன் விசயத்தில் மட்டும் ....
தேடி தேடி உன்னை கண்டேன் .... நமக்கான நம் உறவு மூன்று வருடம் என எண்ணி சொல்லிவிட முடியாது ... என் கனவுகளில், மன தினவுகளில் நீ நுழைந்து பதிமூன்று வருடமல்லவா ஆகிறது ??? உன்னை கைகொண்டு நான் வீறு நடை இட்ட முதல் நாள் இன்றும் என் மனதில் ... அன்று பெய்த ... அதே மழை சாரல் வீச வைக்கிறது ... இன்ப துன்பங்களில் இணை பிரியாத உன் உறவு ... இன்று மட்டுமில்லை ... என்றென்றும் தொடர விரும்புகிறேன் ....
.
.
.
.
.
.

.
.
.
.
.

(ரொம்ப யோசிக்காதீங்க ..... பயங்கரமா, எதிர்பார்ப்புகளோடு படிச்சு முடிச்சிடீங்களா ? இந்த உறவு யாருன்னு தெரியனுமா ? யார் கிட்டயும் சொல்லாதீங்க ... அடிச்சு கேட்பாங்க ... சொல்லிடாதீங்க .... காத கொடுங்க பார்க்கலாம் .... ஏன்னா யாரும் கேட்டுட கூடாது பாருங்க ............................................................................................ 

(Its dedicated to my beloved HP )

BY

GUNA



No comments:

Post a Comment