, இனியவளின் இதய பகிர்வுகள் !: எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?
Views

3/13/14

எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?

வரமா இல்லை சாபமா...
புரியா வாழ்க்கை இது தானோ....

தில்லை நாதா - வந்தென்னை
கொள்ளை கொண்டு போனாலென்ன ?

வரமாகிலும் சாபமாகிலும்
கசக்கும் வாழ்வும் இதுவன்றோ...

விடைகள் கேட்டு உந்தன் பாதம்
பணிந்தேன் சொல்வாயோ.....

விடைதான் இல்லை என்றாலும்
விடைபெற்று நான் எங்கு போவேனோ?

மனமும் இல்லை குணமும் இல்லை
தினமும் தொல்லை... வாராயோ ?

மனமும் தந்து, குணமும் தந்து
எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?


No comments:

Post a Comment