, இனியவளின் இதய பகிர்வுகள் !: ஒரு தமிழச்சியின் கனவு ...
Views

1/15/13

ஒரு தமிழச்சியின் கனவு ...


கரும்பினை கட்டிக்கொண்டு  தூங்கிய         
காலங்கள்  கனவோடு   மட்டுமே ....
பொங்கிடும்  பொங்கலோடு  மனமும் 
பொங்கிடும்  அதிசய தருணங்கள் ....

நகரத்து  பொங்கலும் 
நாகரீகமென  பொங்குகிறது 
நடுவீடதில் டிவி பெட்டியினில் ....

களமெல்லாம்  கூட்டி 
கண்ணை  கவரும் வண்ணங்களில் 
கோலங்களால் நிரப்பிடும் 
காட்சிகள்  இன்று  கணிப்பொறிகளில் ....

கரும்பும் இல்லை 
கனி  பொங்கலும் இல்லை
கரைந்து விட்டது 
கல்லூரி  விடுமுறையும் ...

இனிவரும்  பொங்கலாவது 
இனிக்கட்டும் எனும் ஆவலில் 
இவள் 
தமிழ் ... 


No comments:

Post a Comment