, இனியவளின் இதய பகிர்வுகள் !: மரணத்தின் முகவரி தேடி ...
Views

1/1/13

மரணத்தின் முகவரி தேடி ...



சட்டென்று உன்னை பார்க்க 

சாய்ந்தே கொஞ்சம் போனேனே !

விதி வலியதா ?

சதி வலியதா ?

மதி வலியதா? தெரியாது ...

ஆனால் 

வலி வலியது ...

நெஞ்சமெங்கும் பாரம்,,,,
கண்களிலும்  ஈரம் 
காய்ந்து போய்விட ,

பைத்தியம் பிடிக்குமோ ?
பாதியில் சாவேனோ ?

வழியும் தெரியவில்லை ...
வலி தீர ......


சத்தியத்திற்கு கட்டுப்பட்டு
சவமாய் வாழ்கிறேன் ....

பெயர் தெரியாது வீதிகளில் 
என்  பயணம் 
உன் நினைவுகளோடு 
மரணத்தின் முகவரி  தேடி ...








No comments:

Post a Comment