, இனியவளின் இதய பகிர்வுகள் !: சென்டிமென்ட்டா? ஆசிரியர்கள் தினத்துக்காக????
Views

9/16/13

சென்டிமென்ட்டா? ஆசிரியர்கள் தினத்துக்காக????





சென்டிமென்ட்டா.. ஆசிரியர்கள் தினத்துக்காக.. ஆசிரியர்கள் வாழ்கன்னு எல்லாம் உணர்ச்சிப் பூர்வமா என்னால வாழ்த்து சொல்ல முடியலை பாஸ். ......

இப்படி ஒரு பதிவ நம்ப நண்பர் ஒருத்தர் எழுதி இருந்தார். அவரோட உணர்வுகள் பற்றி தவறு சொல்ல முடியாது. உண்மையா சொல்லணும் என்றால், அப்படி எல்லாரும் அடி வாங்கி இருப்பாங்க ... முதலாம் வகுப்பெடுத்த பங்கஜம் டீச்சர் ..... 5 நிமிடம் லேட் ஆனா கூட ஒரு கிள்ளு கிள்ளுவாங்க பாருங்க .... பயத்துலயே பாதி உசுரு போய்டுங்க ... இரண்டாம் வகுப்பெடுத்த இரத்தினம் டீச்சர் .... அவங்க கைல வெச்சிருந்த பிரம்பு ... தூக்கத்துலயும் மறக்காதுங்க .... மூன்றாம் வகுப்பெடுத்த சின்ன அய்யா ... அதிர்ந்து கூட பேச மாட்டாருங்க .... ஆனா தப்பு பண்ணா அவ்ளோதான் ... வெளில நிக்க வெச்சுடுவாருங்க ... நான்காம் வகுப்பெடுத்த தெய்வானை டீச்சர், ஐந்தாம் வகுப்பெடுத்த சாரதா டீச்சர் இப்படி ஒரு ஒருத்தருக்கும் ஒரு அடையாளங்கள் .... (இதுக்கு மேலயும் உண்டு... ஹை-ஸ்கூல் , கல்லூரி இப்படி பட்டியல் போயிட்டே இருக்கும் ,....)

இந்த அடையாளங்களை அவங்களுக்கென நாமதாங்க உருவாக்கினோம் ??? கொஞ்சமா குறும்பு பண்ணினா அவங்களும் சொல்லறதோட நிருத்தியிருப்பங்க ///  .... என்னை கேட்டால் , அவங்கெல்லாம் பொறுமையின் சிகரம் . நமக்காக கத்தி, டென்ஷன் ஆகி உடம்ப கெடுத்துகிட்டிருகாங்க ... சில உண்மைகள் கசக்கும் .... 

என்னதான் இப்படி அடிச்சு, மிரட்டி, நமக்கு டீச்சர் அஹ இருந்திருந்தாலும், இன்னைக்கு நாம பொய் அவங்களுக்கு மரியாதையாக, பாசமாக 2 வார்த்தை பேசி பாருங்க .... அவங்க மனசுல இருந்து பொங்கும் சந்தோசம் கண்களில் தெரியும் .... மாணவன், மாணவி என்று பெருமையா சொல்லுவாங்க பாருங்க , அங்க தெரியும் அவங்க பாசம் ... நாம பண்ண தவறுக்களை எல்லாம் மறந்து நம்மகிட்ட பேசும் போது நமக்கே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் ....

உண்மையாகவே இன்ற நாள் இப்படி பல உணர்வுகளை தட்டி எழுப்பற நாள்தாங்க என்னை பொறுத்தவரை ....

ஒரு ஒரு ஆசிரியரும், என்னை பொறுத்தவரை நம் வாழ்வெனும் சிற்பத்தை செதுக்க கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட சிற்பிகள் ...

அவர்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னு தெரியலங்க... ஆனா, ஒரு ஒரு தருணங்களிலும் நினைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள் ... வாழ்கையின் ரொம்ப செண்டிமெண்ட் பக்கங்களில் முக்கியமான பக்கம் இந்த 'ஆசிரியர்கள்'.

இது என்னோட உணர்வுகள் ... இப்படி ஒரு ஒருத்தருக்கும் இது மாறுபடலாம் ...

பல வித எண்ணங்களும் வண்ணங்களும் கலந்ததுதானே நம் வாழ்க்கை? ....

இவள்

இசையானவள் ... 05/09/2013


No comments:

Post a Comment