, இனியவளின் இதய பகிர்வுகள் !: அனைவருக்கும் ஆசை ...
Views

9/28/13

அனைவருக்கும் ஆசை ...



அனைவருக்கும் ஆசை ... அனைவரும் நமக்கு பிடித்தபடி நடக்க வேண்டும் என்று.... சரி அவர்களாவது அவரவர் விருப்பபடி நடந்து கொள்கின்றனரா என்றால் அதும் இல்லை ... இப்படி அடுத்தவரை மகிழ்விக்க முயன்று முயன்று கடைசியில் தனக்கு தேவையான சந்தோஷத்தை தர மறந்து போய் விடுகின்றனர் .... என்ன படிக்கும் போதே குழம்புகின்றதா ?

தினம் தினம் எத்தனை முகமூடிகள் ! சிரித்து சிரித்து எத்தனை வேடங்கள் ! கட்சிகளை மாற்றியமைக்கத்தான் முடிவதில்லை ! அட, நிகழ்வுகளை ஏற்று கொள்ளவும் முடிவதில்லையே ! யாரிடமும் உண்மையில்லை ... முகமூடியறிந்தும் முற்றுபுள்ளி வைக்க இயலாத உறவுகள் பல! 

இத்தனையும் அறிந்திருந்தும், உண்மைகள் புரிந்திருந்தும், பாழும் மனது ஆசை படுகிறது இப்படிங்கோ ::: "வாழ்வது ஒரு நாளாகினும் உண்மையாக, பிடிச்சபடி, முகமூடியில்லாமல், முழுவதுமாக வாழ்ந்து விட வேணும்" என !!! எப்புடி? எப்புடி?




No comments:

Post a Comment