, இனியவளின் இதய பகிர்வுகள் !: பேசாத தருணங்கள் !
Views

11/28/11

பேசாத தருணங்கள் !



கோபமில்லை  குற்றமில்லை
காரியமில்லை காரணமில்லை
மௌனம் மட்டும் ஏனோ
மௌனமாய் நம் நடுவில் . . .

தானாய் பேசி
தனியாய் சிரித்து
காலங்கள் ஏனோ
காரசாரமின்றி கடந்து கொண்டிருக்கிறது . . .

பேசிய சொற்கள்
வீசிய கற்கள்
காயங்கள் தழும்புகளாக ஏனோ
காலமெல்லாம் உறுத்தலாக உடனிருக்கிறது . . .

உனக்காக பேசி
உனக்காக சிரித்து
உனதாக வாழ்ந்த காலங்கள் ஏனோ
உயிரினில் உறைந்த தருணங்கள் . . .

வாராது தோழியே !
வருத்தி அழைத்தாலும்
வசந்த காலங்கள்  ஏனோ
வாசல் தேடி வருவதில்லை . . .

இவள்
இனியவள் . . .




No comments:

Post a Comment