, இனியவளின் இதய பகிர்வுகள் !: என்னவன் எனக்காக . . .
Views

11/21/11

என்னவன் எனக்காக . . .


எண்ணத்தில் எழுத்தில்
என்றும் ஆட்சி புரிபவனே !
என்குரல் கேட்டு
எனக்காக வருவாயோ ?
துயர்துடைத்து எந்தன்
துன்பம் நீக்கி தருவாயா?
 வேலை பளுவால் நானும்
வேதனை கொள்ளவில்லை !
ஏதோ தொய்வு
ஏனோ கொணர்கிறேன் !
எங்கோ தவறு,
எனக்காக சரி செய்வாய் !
திருசிற்றம்பலம்  தன்னில்
திருவுருவாய் திகழ்பவனே !
என்குறை தீர்ப்பாயா? 
எனைசிறை மீட்பாயா? 





       இவள் . . .

 கண்களில் கருநீல கழுத்தானை,  
கனவுகளோடு கொண்டு
    காத்திருப்பவள் .....


                               

No comments:

Post a Comment