, இனியவளின் இதய பகிர்வுகள் !: ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....
Views

10/7/13

ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

ஜன்னலில் கொஞ்சம்
சன்னமான நிலவொளி !

நெஞ்சுக்கு அருகினில்
கொஞ்சும் கொலுசின் ஒலி !

அடடே

சொர்க்கம் தேடி நானும்
சொல்லாமலே வந்து விட்டேனோ ?

இந்திர ஜாலம்
இதயத்தில் மெல்லிய சலனம் ... என

அவள் பாத கொலுசின்
ஆட்டம் என்னை

எங்கோ கூட்டி செல்லுதே
ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் நிறைகிறதே ...

நிஜத்தில் நடந்தால்
நெஞ்சம் தாங்குமோ ???



No comments:

Post a Comment