, இனியவளின் இதய பகிர்வுகள் !: கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான் ....
Views

10/7/13

கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான் ....


உன்னில் நானாக இருந்து 
என்னில் நீயாக நடந்து முடிந்த 

காலம் இன்று சிரிக்கின்றது 
கண்சிமிட்டி தாண்டி போகின்றது ....

தவறுகள் மட்டுமே 
தாறுமாறாக தெரிகின்றது ...







குற்றங்கள் மட்டுமே ஏனோ 
சுற்றங்களுக்கு தெரிகின்றன ...

தட்டி கொடுத்த நிமிடங்கள் 
பட்டு போய்விட்டன ...

தெரிந்தே தவறு செய்தாலும்
பிரிந்து செல்ல முடியுமா?

தினம்தினம் ஆயிரம் வேஷங்கள் .... ஆனால் 
அத்தனையிலும் மாறாதது பாசங்கள் மட்டுமல்லவா? 

தென்றலென தேடிவரும் என் 
உள்ளம் உன்வாசலில் ....

கதவுகள் திறக்கவில்லைஎனில் 
காதோரம் சொல்லி செல்வேன் 
நமக்கான நம் நட்பின் கனவுகளை .... 


நடிக்கின்ற இந்த உலகத்தில் உன் 
துடிக்கின்ற இதயம் என்றும் 

மகிழ்ச்சியில் திளைத்திருக்க - என் 
வேண்டுதல்களை விட்டு செல்வேன் ....

No comments:

Post a Comment