, இனியவளின் இதய பகிர்வுகள் !: October 2013

10/8/13

எத்தனை எத்தனை அழகு ...

உனக்கான என் நேரங்கள் 
மிக அழகானவை !

பெறுவதை விட 
தருவதில் உள்ள சுகம் போல !

காணாமல் கண் மூடி 
காத்திருக்கும் நொடிகள் போல !

மண் தழுவும் 
மழை வாசம் போல !

மலராமல் மலர்ந்திருக்கும் 
மலரின் நாணம் போல !

சின்ன குழந்தையின்
செல்ல சிரிப்பை போல !

தேர்ச்சிபெற்ற சிற்பியின் 
தேர்ந்தெடுத்த சிலை போல !

அந்திவானம் சாயும் போது  
சிந்தி சிதறும் வண்ணம் போல !

எத்தனை எத்தனை அழகு ...
அத்தனை அத்தனையும் போதவில்லையடி ,

உனக்கான என் நேரத்தின் 
அழகினை எடுத்து சொல்ல !!!


10/7/13


கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான் ....


உன்னில் நானாக இருந்து 
என்னில் நீயாக நடந்து முடிந்த 

காலம் இன்று சிரிக்கின்றது 
கண்சிமிட்டி தாண்டி போகின்றது ....

தவறுகள் மட்டுமே 
தாறுமாறாக தெரிகின்றது ...







குற்றங்கள் மட்டுமே ஏனோ 
சுற்றங்களுக்கு தெரிகின்றன ...

தட்டி கொடுத்த நிமிடங்கள் 
பட்டு போய்விட்டன ...

தெரிந்தே தவறு செய்தாலும்
பிரிந்து செல்ல முடியுமா?

தினம்தினம் ஆயிரம் வேஷங்கள் .... ஆனால் 
அத்தனையிலும் மாறாதது பாசங்கள் மட்டுமல்லவா? 

தென்றலென தேடிவரும் என் 
உள்ளம் உன்வாசலில் ....

கதவுகள் திறக்கவில்லைஎனில் 
காதோரம் சொல்லி செல்வேன் 
நமக்கான நம் நட்பின் கனவுகளை .... 


நடிக்கின்ற இந்த உலகத்தில் உன் 
துடிக்கின்ற இதயம் என்றும் 

மகிழ்ச்சியில் திளைத்திருக்க - என் 
வேண்டுதல்களை விட்டு செல்வேன் ....

தோழி ....., புரியாத புதிர் நீ !



இன்பம் - துன்பம்
இரண்டற கலந்தவள் நீ !

கண்ணீர் - களிப்பு
கலவை  நீ !

சண்டை - சமாதானம்
சரிவிகிதம் நீ !

ஏற்றம் - தாழ்வு
ஏகமாய் தருபவள் நீ !

விருப்பு - விஷமம்
விகிதாசரம் நீ !

நெருக்கம் - பிரிவு
நெஞ்சுருக்கம் நீ !

அயர்ச்சி - அரவணைப்பு
அடுத்தடுத்து அளிப்பவள் நீ !

குழப்பம் - தெளிவு
என்னுள் என்றும் நீ !










ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

ஜன்னலில் கொஞ்சம்
சன்னமான நிலவொளி !

நெஞ்சுக்கு அருகினில்
கொஞ்சும் கொலுசின் ஒலி !

அடடே

சொர்க்கம் தேடி நானும்
சொல்லாமலே வந்து விட்டேனோ ?

இந்திர ஜாலம்
இதயத்தில் மெல்லிய சலனம் ... என

அவள் பாத கொலுசின்
ஆட்டம் என்னை

எங்கோ கூட்டி செல்லுதே
ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் நிறைகிறதே ...

நிஜத்தில் நடந்தால்
நெஞ்சம் தாங்குமோ ???



10/5/13

சலசலப்பு...

மனம் கசிந்து 
கண்களில் தெறிக்கும் போது 
ஒரு  மெல்லிய சலசலப்பு ...
மனதிற்கு வெளியே ....
எட்டி பார்த்தேன் ...


உன் குறுந்தகவல் ...
இப்பொழுது 
பல புயல்களின் சலசலப்பு ...
மனதிற்கு உள்ளே ...

அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா ? ? ?



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் 

துளியாய் துளியாய் குறையும் 

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே 

தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும் 

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே 

இந்த காதல் வந்துவிட்டால் 

நம் தேகம் மிதந்திடுமே 

விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே 

ஒ ..ஒ ..ஒ ..



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


ஆசை என்னும் தூண்டில் முள் தான் 

மீனை நெஞ்சை இழுக்கும் 

மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட 

மனம் துடிக்கும் 

சுற்றும் பூமி என்னை விட்டு 

தனியாய் சுற்றி பறக்கும் 

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ 

புது மயக்கம் 

இது மாய வலை அல்லவா 

புது மோக நிலை அல்லவா 

உடை மாறும் நடை மாறும் 

ஒரு பாரம் என்னை பிடிக்கும் 


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா ??????????????????????????????????????????????????????????????????????????????????????????

10/4/13

கள்ளம் கபடமற்ற உன் மனது ... (Only For You my Dear...)

ஒரு ஒரு ஜீவனுக்கும்  உயிரோடு உறவாடும் ஒரு நேசம் இருக்கத்தான் செய்கிறது இப்பூவுலகில் ... காதலாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நட்பாகவும் இருக்கலாம். காதல் : இன்பத்தை தரும். இன்பமாக இருக்க விடாது ... நட்பு .................. ?

எனக்கு கிடைத்த நட்பு ...


உலகினில் எனக்கான பொக்கிஷம் ... என் வாழ்வினை மாற்றியமைத்த ஒரு பயணம் ... எனக்கான உன் நட்பு ... நினைத்து பார்த்தால் அத்தனையும் இன்பம்தான் ... (இன்று என்னை நினைக்க உனக்கு நேரமில்லாத போதிலும்)

எனக்கே எனக்கான உன் உலகம் என்றும் பசுமையோடுதான் இருக்கிறது. மாறுவதற்கு மறந்து போன வசந்த காலமாய் பூத்துக்கொண்டுதானிருக்கிறது ... (என் இதயத்தில் மட்டுமே)

காலம் நான்கு வருடங்கள் இதோ முடிய போகிறது, உன்னுடனான என் பிரிவுக்கு பிறந்தநாள் பிறக்கத்தான் போகிறது.... எத்தனையோ மாற்றங்கள் நம்மில் வந்து போனாலும் தவறுகளை ஒத்துக்கொள்ளவோ, திருத்திக்கொள்ளவோ ஏனோ நம்மிருவரிடமும் மாற்றம் வரவில்லை . 

நீ பிரிந்து போனதால் மறந்து போனேன் ... நீ மறந்து போனதால்தான் பிரிந்து போனேன் ... தன மேல் பிறர் வைத்திருக்கும் அன்பினை எண்ணி எண்ணி மகிழ்ந்த காலங்கள் மறைந்து, ஒருவர் மற்றவர்கள் மீது தவறுகளை தேடி பிடிக்கும் காலம் வந்து விட்டது.... 

எனக்காக வைத்துக் கொள்ளப்பட்டதாக சொன்ன அலைபேசியில் என்னை அழைத்து பேசவே மறந்து போன காலம் இந்த நிகழ்காலம் ... விடிய விடிய கதை பேசி (என்னோடு), விடிந்த பின்பு உறங்கி போன கவிதை கோலங்கள் ... உன் குரல் கேட்டு எழுந்து கடைசியாக உன் குரலிலே உன்றங்கி காலங்கள் ... இன்று புயலடித்து களைந்து போன காலங்கள் தானோ ?

உன்னிடம் நான் கண்டு பெருமிதம் கொண்ட எல்லாமே இப்பொழுது குறைத்து விட்டதாய் என் மனம் போரிடுகிறது அறிவோடு ... அறிவு சொல்கிறது, அவள் அப்படிதான், சூழ்நிலைக்கு அடிமையில்லை உன்னைப்போல என்று மறு மொழி கூறி நகைக்கிறது.... 

உன் மீது நீ கொண்ட நம்பிக்கை... ஜெகத்தினை ஜெயிக்க வைக்கும் உன் அன்பு... யாரிடமும் அசராத உன் கண்டிப்பு ... கல்வியில் நீ கொண்ட கடமை ... உனக்கான வரைமுறைகள் (நீ வகுத்து கொண்டதுதான் ! )... ஒழுக்கத்திற்கான விதிமுறைகள் ... என அத்தனை அத்தனையும் என் தோழியிடம் ... நான் கண்டு பெருமிதம் கொண்டதுண்டு ... எப்படியும் வாழலாம் என்றிருந்த என்னை மாற்றிய உன் நட்பு... இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உன் கொள்கை ... அத்தனைக்கும் நான் காலமெல்லாம் தலை வணங்கியே ஆகா வேண்டும் தோழியே ...


உனக்கான வார்த்தைகளை தேடும் பொழுது வரும் மன போராட்டங்கள் சொல்கின்றன நமக்கான இடைவெளியை ... எதையும் சொல்லும் மன நிலை (தைரியம்) என்னிடம் இல்லை. சொன்னாலும் பிடிவாதம்தான் முன்னின்று நம்மிடையே பஞ்சாயத்து செய்ய வேண்டியிருக்கும் ... என் மேல் நீ சுமத்த ஆயிரம் குற்றங்கள் என்னிடமும் உண்டு.... ஆனால் உன்னை குற்றம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை... என்னுடைய தேர்வு எப்படி தவறாகும் ? நான் உனக்கு பிடிக்காததை செய்யும் போதெல்லாம், உனக்கான என் உலகம் உன்னை விட்டு நகர்ந்து சென்றது ? அனால் எனக்கான உன் உலகம் இவ்வளவு இடைவெளியில் என்னை விட்டு சென்றதேன் ? நான் என்றுமே இப்படிதான் என உனக்கும் தெரியும். ஆனால் நீ என்றுமே இப்படியில்லையே ? இன்று ஏன் ? நன் கேட்பது தாமதமாக இருக்கலாம் . ஆனால் நான் கேட்பதில் தவறில்லையே ?

எத்தனை இடைவெளி வந்தாலும், காலங்கள் கன நூறு கடந்தாலும் மாறாமல் இருப்பதுதானே உண்மையான அன்பு ? நீரின் தன்மை மாறலாம் . உருவம் மாறலாம் ... ஆனால் அது இயற்கை தன்மை மாறிவிடுமா என்ன ? நெருப்பினில் வெந்து விடுமா என்ன ? அது போல ..... கள்ளம் கபடமற்ற உன் மனது ... ஒரு பொழுதும் மாறாது... இன்ற இந்த நிகழ்காலமும் மாறும் ... கடந்த காலத்தை போல... அந்த இறந்த காலமும்  நிகழ் காலம் ஆகும்... இந்த நிகழ் காலமும் இறந்த காலம் ஆகும்... அந்த வசந்த காலத்திற்கு காலமெல்லாம் காத்திருப்பேன் .... இன்றைய அவசர உலகம் உனக்கு என்றாவது சலிக்கும் போது , உன் கடந்து வந்த பாதையில் சற்று நிதானித்து திரும்பி பார் ... உனக்காக காத்திருப்பேன் ... நீ ஓய்வெடுக்க நான் தோள் தருவேன் ... உன் மனதின் அலைகள் ஓயும் பொழுது அடியினில் நானிருப்பேன் ... 

(No-one in this world having busy schedule... The only thing is giving priority... That's all... 
I may last in this 'Q'... 
But this is not an END... 
Because, everything should have a happy end.. If it is not... Its not an END...
I believe this ...) 






I also believe that, you can understand, what I am stating here. And you ask a moment to your heart. it knows everything...  Just sit peacefully, close your eyes. And you can ask yourself...

1. What I am doing at present ?
2. Am I travel in wright way ?
3. Whats my duty ?
4. Is this above said wording are correct?
5. How much I am close to God?
6. Am I OK?
7. 'I am happy' Is this sentence is true?


Answer the above said questions. Why I am asking you these seven question only? Because of your name, which I used to call you is seven letters know.

[Even I don't know, you will read or not. But for my satisfaction, I shared my feelings here. 
Really I feel ..... 
Previously, You used to say that, 'I can feel your feelings'. Now how much this sharing will work? I don't know. But my heart started to offering prayers for your GOOD. Close/ Distance... That is not a matter. You should be happy & GOOD. Thats enough. Hence, I am your friend, well-wisher, I am seeking your 'Good' & I am always awaiting for your 'RETURN']

Here

GUNA