கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ... எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .... இவள் இனியவள் !
10/30/12
10/21/12
யாரறிவார் நாளைதனை ?
என்னை விட்டு போக
ஏனோ நீயும் முடிவெடுத்தாய் . . .
அனாதையென எந்தன்
அன்னையும் விட்டு போனாள் . . .
மறுவார்த்தை பேச மனமின்றி - நானும்
மதிகெட்டு ஏற்றுக்கொண்டேன் . . .
நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கி போகக் கண்டேன் . . .
வலிகளின் ஆழம்தான் என்
அன்பின் ஆதிக்கத்தை உணர்த்தியது . . .
வந்துவிடு உயிரே . . .
வசந்தம் தந்துவிடு உணர்வே . . .
முப்பது நடக்கலாம் - என் வாழ்க்கை
முடிந்தும் போகலாம் . . .
யாரறிவார் நாளைதனை ?
ஏனோ நீயும் முடிவெடுத்தாய் . . .
அனாதையென எந்தன்
அன்னையும் விட்டு போனாள் . . .
மறுவார்த்தை பேச மனமின்றி - நானும்
மதிகெட்டு ஏற்றுக்கொண்டேன் . . .
நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கி போகக் கண்டேன் . . .
வலிகளின் ஆழம்தான் என்
அன்பின் ஆதிக்கத்தை உணர்த்தியது . . .
வந்துவிடு உயிரே . . .
வசந்தம் தந்துவிடு உணர்வே . . .
முப்பது நடக்கலாம் - என் வாழ்க்கை
முடிந்தும் போகலாம் . . .
யாரறிவார் நாளைதனை ?
கண்மணியவள் இல்லாத நாட்கள் !
21.10.2012
தாகம் என தயங்கி நிற்கையிலே
மேகமென மழையாய் பொழிந்தாய் ...
தாயின்றி சேயும் இங்கு
வாழ்வது எப்படி சாத்தியமா ?
உயிரில்லா உடலைப்போல
உணர்வின்றி வாழும் வாழ்க்கை !
தண்டனையா? தவமா ?
தவிப்புடன் காத்திருக்கிறேன்!
30 நாட்கள் நோன்பிருந்தால்
தேவதை அவளும் தேடியே வருவாள் . . .
கறுப்பு நாட்களென
கசந்தே கரைகின்றன
கண்மணியவள் இல்லாத நாட்கள் !
இவள்
காத்திருப்பவள் . . .
தாகம் என தயங்கி நிற்கையிலே
மேகமென மழையாய் பொழிந்தாய் ...
தாயின்றி சேயும் இங்கு
வாழ்வது எப்படி சாத்தியமா ?
உயிரில்லா உடலைப்போல
உணர்வின்றி வாழும் வாழ்க்கை !
தண்டனையா? தவமா ?
தவிப்புடன் காத்திருக்கிறேன்!
30 நாட்கள் நோன்பிருந்தால்
தேவதை அவளும் தேடியே வருவாள் . . .
கறுப்பு நாட்களென
கசந்தே கரைகின்றன
கண்மணியவள் இல்லாத நாட்கள் !
இவள்
காத்திருப்பவள் . . .
10/4/12
10/2/12
Subscribe to:
Posts (Atom)