, இனியவளின் இதய பகிர்வுகள் !: என் ஜெகமெல்லாம் நிறைந்தவளிடம் ஒரு பகிர்வு....
Views

12/24/13

என் ஜெகமெல்லாம் நிறைந்தவளிடம் ஒரு பகிர்வு....

ஜெகமெல்லாம் நிறைந்தவளே.... உன்னுடனான எந்தன் உறவு ... உலகில் எனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைக்க தோன்றுகிறது... தினம் தினம் அதிசயமாகவே தோன்றுகிறாய்... படிக்க படிக்க புதிதாக இருக்கும் புத்தகம் போல நீ... கோடி கணங்கள் உன்னோடு கடந்தாலும் உன்னில் கற்று கொள்ளவும், பெற்று கொள்ளவும் ஏராளமாக வைத்திருப்பாய்.... உன்னை புரிந்து கொண்டது போலவும் இருக்கும்... புரியாத புதிர் போலவும் இருக்கும்... இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கிடைத்த நட்பு உன்னுடையது... உனக்கான எல்லைகள் மிக கடினமானவைகள்... உன் அனுமதியின்றி உள் நுழைய முடியாது... அதை போலவே உன்னிடம் அனுமதி பெற நெருங்குவதும் அவ்வளவு எளிதல்லவே ???

தன்னம்பிக்கை கற்று தந்தாய்... உன் செல்ல திட்டுகள் கூட எதையாவது கற்று தரும்... அன்று முதல் இன்று வரை 'குரு' பரிணாமம் மட்டும் மாறவே இல்லை உன்னிடம்... உன்னிடமிருந்து கற்று கொள்ள ஆயிரமாயிரம் இருக்குமே தவிர... உனக்கு கற்று தருவது என்பது ஒரு நாளும் நடக்க முடியாத ஒரு செயல்... நீ ஏற்று கொள்ள போவதும் இல்லை...

குழந்தையென உன் உறவு... குதூகலத்தை தருவதில் என்றும் எனக்கு குறை வைத்தது இல்லை ... அமுத சுரபி என ... நீயும் எதை செய்தாலும் கோபம் வருவதில்லை ... வருத்தங்கள் பல உண்டு... சிறு குழந்தை செய்யும் தவறுகளுக்கு கோப பட முடியுமா???

உன்னிடம் எந்த  எதிர்பார்ப்பும் இல்லை என சொல்ல முடியாது... ஏனெனில் , உன்னிடம் எந்த எதிபார்ப்பும் இல்லை என்று சொல்ல நீ என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பேராசை அனைத்தும் உள்ளது....

உனக்கான உலகம் மிக சிறியது... மிக மிக அழகானது... என்றும் எனக்கு ஒய்வு தரும் ஒரு குட்டி சொர்கமல்லவா ...

நாம் நம் வாழ்வினில் சந்திக்கும் அனைத்தும் விபத்துகள் அல்லவே ??? ஏதோ ஒரு காரணத்திற்கு மட்டுமே அனைத்து சந்திப்புகளும் நடைபெறுகிறது... நான் உன்னை சந்தித்ததும் அப்படிதான் என நம்புகிறேன்...

எத்தனை எத்தனை முரண்பாடுகள் நம் இருவருக்குள்... அத்தனையும் தாண்டி இன்றும் இனிதே இந்த பயணம் தொடருகிறது... இனி பயமில்லை... காலமெல்லாம் தாண்டி வல்ல்கை கடலின் கரையை தொட்டு விடும் நம் உறவு படகு... ஆனால் மனதில் சின்ன நெருடல்... சரியா தவறா தெரியாது..மனதில் சட்டென்று சிறு வலி தோன்றுகிறது... எனக்கான உன் நேரங்கள் ஏற்கனவே பகிர்ந்தளிக்க பட்டுவிட்டது... இனி ... கண்டிப்பாக நடைபெற வேண்டிய ஒன்றுதான்... ஏன், என்னுடைய வேண்டுதலும் கூட... கனவும் கூட... கனவு கை கூடி வரும் போது சிறு வலி... இனி நீயும் வாழ்க்கை சக்கரத்தில் சுழல தொடங்கி விடும்போது நான் மறைந்து போகாமல் இருக்க வேண்டுமென.... உன்னிடம் சொல்லியது தான்... உரக்க கத்தியதுதான்...

"இன்று மட்டுமல்ல... என்றும் தொடரும்... எனது ஏகாந்த தொந்திரவுகள்"
                    
                                                                        இவள்





No comments:

Post a Comment