, இனியவளின் இதய பகிர்வுகள் !: நிலவின் நினைவுகளோடு . . .
Views

3/29/12

நிலவின் நினைவுகளோடு . . .

 



நட்பென்னும் நாட்குறிப்பில் - என்னில்
நாளும் இடம் பெறுகிறாய் . . .
சட்டென்று நீயும் வந்தாய் .  . . ஏனோ
பட்டென்று நெஞ்சில் பதிந்தாய் !

உன் எளிமையின் ஏகாந்தம் - என்னில்
பண் பாடும் தென்றலாய்
மண் வாசம் தரும் மழை சாரலாய் . . . ஏனோ
என்னில் பூவாசமாய் வீசுகிறாய் !

தோழியாய் உன்னிடம் தோற்று போனேன் . . . என்னில்
நாளிகைதோறும்  நம்பிக்கை தந்தாய் . . .
வாழ்நாள் வசந்தமாய் வந்தவளே . . . ஏனோ
தொலைவில்  தொடுவானமாய் தோன்றுகிறாய் !

நாளும் உனக்கு நன்மைகள் விளைந்திட - நானும்
நடராஜனை நம்பிக்கையுடன் தொழுகிறேன் . . .
வெற்றியின் மாலைகள் உன் தோள் சேர்ந்திட
வேதம் தந்தவனை தாள் பணிகிறேன் !

உற்சாகம் உடன் கொண்டு நீயும்
உலகினை வலம் வந்திட
உள்ளம் உருகி வேண்டுகிறேன் ,
உலகை அளந்தவனிடம் கை கூப்புகிறேன் !

இவள்

இனியவள் . . .



No comments:

Post a Comment