, இனியவளின் இதய பகிர்வுகள் !: February 2014

2/12/14

சில நேரங்களில் மட்டுமல்ல ...


சில நேரங்களில் மட்டுமல்ல - வாழ்வின்
பல நேரங்களில் தேவை ,

அன்பானவர்களின் அறிவுரையோ 
ஆலோசனையோ அல்ல...

அவர்களின் பொன்னான, 
கண்ணான சில மணித்துளிகள் ;
நாம் சொல்வதை கேட்பதுதான் ....

அன்றி, 

ஆலோசனையோ அறிவுரையோ அல்ல !

பொதுவாக, 

எதிரில் பேசுபவர் சொல்வதையே 
எப்போதும் கேட்டு கொண்டிருக்க தோன்றும் !
ஏனெனில், கிடைக்க பெறாதவர்க்கே 
கிடைப்பதின் நிம்மதி புரியும் !

ஆதலால் சொல்கிறேன்,

கேட்பதும் சுகமே !
பெறுவதில் கிடைக்கும் சுகத்தை விட
தருதலில் உள்ள சுகம் போல !

- குணா ...

2/4/14

நீ !




அமைதியாய் நான் ...
         
                 ஆர்ப்பாட்டமாய் என்னுள்

                              இசைகச்சேரியாய் நீ !


இன்று....



பாலை வனத்தில்
        மாலை நேரத்தில்
                    மழை சாரல் !

இன்று
     என்னவளின் கச்சேரி !
           என் காதுகளில் மட்டும் !
                      என்றும் வரமாக !

2/1/14

நித்தியமாய் என்னுள்ளே....

துக்கத்தினாலோ
துயரத்தினாலோ  - ஏதோ ஒன்று

தூக்கம் இன்றி
தூக்கலாய் ஒரு இரவு ...

நிசப்தமான அமைதி
நிர்மூலமான இருள் ...


நிச்சயமாய் மிக
நிதர்சனமாய் உன்
நினைவுகள் மட்டும்
நித்தியமாய் என்னுள்ளே....