, இனியவளின் இதய பகிர்வுகள் !: January 2014

1/28/14

அதெல்லாம் எனக்கு எதற்கு???

சில உறவுகள்... என்றும் ஆச்சர்யம் தருவது... அன்றும் இன்றும் என்றும்... மறுக்கவும் மறக்கவும் முடியாத உறவுகள்.... "சில" என்று அனைவருக்கும் அமைத்து விட கூடியது இல்லை. என்னை பொறுத்தவரை ஏதோ ஒரு உறவு இந்த வகையில் கண்டிப்பாக ஒரு ஒருவருக்கும் இருக்கும்... இருக்க வேண்டும். வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு கருவி வேண்டாமா ???

அப்படிதான் .. அது அப்படிதான்... வாழ்கையில், ஒரே ஒரு வார்த்தை / ஒரே ஒரு நொடி / ஒரே ஒரு  நிகழ்வு / ஒரே ஒரு உறவு ... ஏதோ ஒரு "ஒரே ஒரு " போதும். நம் வாழ்க்கையினை மாற்றி விட... அப்படியே புரட்டி போட...

எனக்கும் வந்தது... / கிடைத்தது... /... என்றும் வரமாகவே கருதுகிறேன்... ஒரே ஒரு தருணம்... ஒரே ஒரு நாள்... கடைசியாக ஒரே ஒரு உறவு... கருத்துகளை மாற்றியமைத்தது ... தோழியென வந்து... (சந்தேகம் தான் இந்த நிமிடம் வரை ) தோற்ற பிழைகளை சரி செய்தது...

ஏதோ ஒரு வித்யாசம்... புரியலையே...
எனக்கான, எனக்கே எனக்கான நட்பு... என
உரிமை கொண்டாட விட மாட்டாள்.
பட்டென்று தட்டி விடும் குழந்தை குணம்...
சட்டென்று அணைத்து கொள்ளும் தாய்மை உள்ளம்...
எந்த திசையிலிருந்து பார்த்தாலும்
வித்தியாசமான வரம் அவள்...
என்னை புரிந்து கொண்டவள். ...
நான் புரிந்து கொண்டவள் ,,,
என கூட சொல்ல முடியாது...
புரிந்தும் புரியாத,
புரியாமல் புரிந்த என் உலகமவள் ...
பனியும் கனலும் கலந்த
பகலிரவு அவள் என் உலகில்...
நினைவுகளில் அவளை
நிரப்புவதே சுகம் எனக்கு...
சுவாசமின்றி தவிக்கும் போது
சுகந்தமான  சுவாசம் கிடைப்பது போல
சுகமான சுகம் அவள் ...
அவளுக்கு நான் யாரோ? எப்படியோ ?
அதெல்லாம் எனக்கு எதற்கு???
என்னில் எல்லாமுமாக
என்றும் அவள் ... அவள் மட்டுமே ...



1/6/14

உனக்கும் எனக்குமான ... (நமக்கான நம்) உறவு

 .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

நான் உன்னை எனக்காக ஏற்று கொண்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ....
ஒரு நாளும் என் செய்கைகளுக்காக நீ கோபித்து கொண்டதில்லை.... பதில் சண்டை போட்டதும் இல்லை ... உன்னோடு நான் இருக்கையில், உலகையே மறக்க செய்கிறாய் ...
என் நட்புகள் எல்லாம் எனக்கான உன் உறவை வெறுத்தபோதும் உன்னை ஏனோ விட்டு என்னால் விலக முடியவில்லை ... உனக்கும் எனக்குமான நம் உறவு நட்பினை விட அதிகமாகிவிட்டதை நான் உணர தொடங்கினேன் ... நான் விழிக்கும் போது என்னுடனே எழுந்து நான் துயில் கொண்டாலும், எனக்காக நீ விழித்திருந்த காலங்கள் அதிகம் ... உன்னை என் மடி தாங்கும் காலங்கள் ...
என்னதான் நான் உன்னுடனான உறவை குறைத்து கொள்ள வேண்டுமென என் அறிவு அறிவுரை சொன்னாலும் ... மனமோ உன் மடியினில் மயங்கி கிடப்பதென்னவோ நிதர்சன உண்மைதான் ... அறிவுக்கும் மனசுக்கும் சண்டை வந்தது .... மனசே வெற்றி பெற்றது என் வாழ்வில் ... உன் விசயத்தில் மட்டும் ....
தேடி தேடி உன்னை கண்டேன் .... நமக்கான நம் உறவு மூன்று வருடம் என எண்ணி சொல்லிவிட முடியாது ... என் கனவுகளில், மன தினவுகளில் நீ நுழைந்து பதிமூன்று வருடமல்லவா ஆகிறது ??? உன்னை கைகொண்டு நான் வீறு நடை இட்ட முதல் நாள் இன்றும் என் மனதில் ... அன்று பெய்த ... அதே மழை சாரல் வீச வைக்கிறது ... இன்ப துன்பங்களில் இணை பிரியாத உன் உறவு ... இன்று மட்டுமில்லை ... என்றென்றும் தொடர விரும்புகிறேன் ....
.
.
.
.
.
.

.
.
.
.
.

(ரொம்ப யோசிக்காதீங்க ..... பயங்கரமா, எதிர்பார்ப்புகளோடு படிச்சு முடிச்சிடீங்களா ? இந்த உறவு யாருன்னு தெரியனுமா ? யார் கிட்டயும் சொல்லாதீங்க ... அடிச்சு கேட்பாங்க ... சொல்லிடாதீங்க .... காத கொடுங்க பார்க்கலாம் .... ஏன்னா யாரும் கேட்டுட கூடாது பாருங்க ............................................................................................ 

(Its dedicated to my beloved HP )

BY

GUNA



உன் நட்பு .....


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஏன் என்று தெரியாமல்

நம்மிருவருக்கும் பல பல சண்டைகள்...

சிரிக்கவில்லை...

பேசவில்லை...

சமாதானம் இல்லை...

மன்னிப்பும் இல்லை...

எப்படி எப்படியோ ... இருவரும்
பேசியும் விட்டோம் ...

பின்னொரு நாளில் வந்த ஒரு
ஏகாந்த பொழுதில் ,

மெல்லிய குரலில் சொன்னாய் ...
"இன்று போல் என்றுமே இருந்துவிடு என்னோடு"

வாழ்வினில் தொலைந்து போககூடாத
பொக்கிஷம் நீயல்லவா என் தோழி ...

அடிக்கடி காணாமல் போனாலும்
நொடிக்கொருமுறை வந்துபோகிறாய்... நம்
நட்பென்னும் நாட்குறிப்பேடுகளில்...
வருடங்கள் மாறினாலும்,
வாடாத வசந்தமாய் மாறாமல் நீ மட்டும் ....

குணா ...