, இனியவளின் இதய பகிர்வுகள் !: June 2013

6/17/13

காலத்தால் அழியாது ...


புது புத்தக வாசம் 
புத்தாடைகளின் சலசலப்பு 

தெரியாத முகங்கள் 
அறியாத அச்சங்கள் 

பெருமிதமாய் பெயர் சொல்லி 
சிறு பிள்ளையென நான் செல்ல 

அம்மாவின் கையசைப்பில் 
அப்பாவின் புன்னகையில் 

பிரிய மனமில்லாமல் 
மெல்ல நுழைந்தேன் .....

நினைக்கையில் இனிக்கிறது 
நெஞ்சமெல்லாம் கனக்கிறது ...

பள்ளிதனை நான் கடக்கையிலே 
நெஞ்சமது நகர மறுக்கிறது ...

பட்டங்கள் பெற்றாலும் 
சட்டங்கள் தெரிந்தாலும் 

கபடமற்ற குழந்தைப்பருவம் 
கற்றுத்தந்த பாடமெல்லாம் 
                      காலத்தால் அழியாது ...