, இனியவளின் இதய பகிர்வுகள் !: February 2013

2/26/13

உயிரோடு ஒரு பாடல் ...

யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு தொன்னையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


2/12/13

தோழிக்கான ஒரு பிராத்தனை

அட என்னங்க....

முன்னுரை எழுதியாச்சு . முடிவுரை வேண்டாமா ? (நீங்க திட்றது கேட்குதுங்க, ஊர் வந்ததும் ஊடகத்தை தேடி ஓடி வந்தேன் ... )

கொஞ்சம் பிஸி ... அதான் .

சரி சரி விஷயத்துக்கு வருவோம்.

நான்  எழுதின முன் பதிவினில் ஒரு தோழி யின் கண்ணீரை பகிந்துகிட்டேன் .... சரியானு தெரியல . ஆனா ஏன் மனசுல இருந்த பாரத்தை இறக்கி வைக்க இடம் தெரியலைங்க .....

அவளுக்கு நான் தந்த யோசனை இந்த பதிவினில் உங்களோட பகிந்துக்க விரும்பறேங்க ... வழக்கம் போல உங்க கருத்துரைகளை நீங்களும் கூறலாம். நன் சொன்னது சரியாய் தவறா என தெரியாது.

*****************************


போனது போகட்டும் ...
போகிஎன முடியட்டும் ...

நல்ல உள்ளங்கள்
நாளும் உனக்காக ....

ஒரு கதவு மூடினால்
மறு கதவு திறந்திருக்கும்

கண் திறந்து நீயும்
காட்சி நோக்க வேணும் ...

சுயநல உலகம்தான் ...
சூட்சிகள் சூழலும்தான் ...

பெண்ணே நீ பதறாதே ...
கண்ணீர்தனை சிந்தாதே ... 

கடமைகள் காத்திருக்க
மடமையென இருப்பதேன் ?

நீ கொண்ட பாசம்
தாய் கொண்ட நேசம் ...

உன் நட்பு - அவளுக்கு  ஏனோ
கொடுத்து வைக்கவில்லை...

கண்ணீர் சிந்தியது போதும் ...
காட்சி பிழைகளும் போதும் ...

பன்னீர் பூக்களும் உனக்காக...
பாச மழையும் உனக்காக ...

நித்தம் நித்தம் நிம்மதி
சித்தமெல்லாம் சிவ சந்நிதி ...

நட்பும் வாழ்க்கைதான்
நட்பு  மட்டும் வாழ்க்கையல்ல ....

*******************************

இப்படி ஏதோதோ சொல்லி (உளறி) அவளை தேற்றினேன் (நினைத்தேன்). நீங்களே சொல்லுங்க... ஏமாற்றி நட்பு மட்டும் தான் வாழ்க்கையா ? எந்த மனிதனின் மனதினில் சோகங்கலில்லை ? ஏமாற்றங்கள் இல்லை ? கண்ணீர் இல்லை ? எல்லாமே இருக்குங்க ... ஏனோ வெளில சிரிசுகிட்டு , Hi , how  are you கேட்கற நாடக நடிகர்கள் கிட்ட yeah , I  am  fine  என சொல்லிட்டு போய்கிட்டு தன இருகாங்க பய புள்ளைங்க ....

நானும் உங்கள கேட்கறேன் "எப்படி இருக்கீங்க? சுகம் தானே ?" . மனசுல கை வெச்சு சொல்லணும் நாடக பிரதியா  நான் கேட்கல. அன்பின் சாட்சியாக கேட்கிறேன் ? சொல்லுங்க பாக்கலாம்.

சரிங்க . கடைசியா ஒரு சின்ன வேண்டுகோல் . உங்களுக்கு அறிமுகம் இல்லாமல், உங்களில் ஒரு நாடக பிரதிநிதியாய், உங்களில் ஒரு மானுட பிறவியாய்  வலம் வரும் என்  தோழிக்காக  ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள் .... அவள் மனம் நலம் பெற ....
***********