![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhycfb0t7fm7YCcoBH3bi3SMCLt7s275ppMnfQkWVKxNCtT1oRN0cu6cpHFjiqM-OB3SFz9eQnD7_SRIINGrDODl6ADA7Rd-kkt40xw2TjO4SJEsQtWuTyksW0Q2ZfQFt7wnsDvQrWcHIRQ/s320/yellow-roses.jpg)
தெரியாமல் இங்கு
மாட்டிக் கொண்டேனோ ?
தேடி தேடி
தொலைந்து போனேனோ ?
நித்தம் நித்தம்
நித்திய சுகம் !
நிலவொளி தென்றலில்
நெகிழ்ந்திருந்த காலம்!
எல்லாமே போயாச்சு !
வெட்டவெளி போலாச்சு !
ஆனால்,
தொடுவானம் கூட எனக்கு
தொட்டு விடும் தூரம் தான் !
தேவதை உன் நினைவால்
தேசமெல்லாம் வென்று வருவேன் !
தோழி உன் பாதத்தில்
தேடி வந்து சமர்பணம் செய்வேனடி !
@ குணா ...