கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ... எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .... இவள் இனியவள் !
6/4/12
4/1/12
மனமே மாறிவிடு !
என் மனமே,
மயக்கம் கொள்ளாதே ,
மறந்து போகாதே. . .
மாட்டிகொண்டு விழிக்காதே ,
மாற்றம்தேடி மருகாதே . . .
தேடித்தேடி தொலைக்காதே . . .
தேவையில்லாமல் தேம்பாதே . . .
பழமொழிகள் பலனில்லை
படித்திருந்தும் புத்தியில்லை . . .
தவறும் தவறாகாது . . .
தடைகள் இருக்காது . . .
காலம் கடக்கட்டும் . . .
காட்சிகள் மாறட்டும் . . .
உணர்ந்துகொள்வாய் நீயும்
உருகி நிற்பாய் உண்மையை . . .
உரைப்பவள்
உலக நாயகனனின்
உள்ளம் நிறைந்தவள் !
3/30/12
சிறு பெண்ணுக்கு சமர்ப்பணம்!
பெண்ணின் மனமே . . . மண்ணின் ஆழமே !
சிறு சந்தர்ப்பத்தில் சரிந்து போகின்றாய் . . .
மழையில் சரியும் மண் போல . . .
சிறு பேச்சில் மகிழ்ந்து போகிறாய் . . .
சாரல் தரும் மண் வாசம் போல . . .
சிற்றின்பங்கள் சிரம் ஏற்காதே . . .
சிதறி நீயும் கதறாதே !
சிறு நொடி நீயும் பொறுத்திடு!
சிந்தனை செய்து அடி வைத்திடு !
சிறந்த பிறப்பாய் மாறிடு !
சினம் நீயும் தவிர்த்திடு
சிரத்தையாய் கண்ணீர் சிந்தாதே . . .
சிந்தனை செய்து நடை போடு . . .
சிகரம் தொடலாம் நீயும் !
சிலபல வெற்றிகள் பெறலாம் நாளும் !
சிறு சிறு தவறுகள் தான் - நீ
சிக்கிக்கொண்டு தவிக்க தடமாகிறது . . .
சிறு பெண்ணின் மனமே . . .
சிரம் ஆட்டி ஏற்பாயா இக்கருத்தை ?
சிந்தித்திடு . . .
சிறந்திடு . . .
இவள்
சிந்தித்தவள்
3/29/12
நிலவின் நினைவுகளோடு . . .
நட்பென்னும் நாட்குறிப்பில் - என்னில்
நாளும் இடம் பெறுகிறாய் . . .
சட்டென்று நீயும் வந்தாய் . . . ஏனோ
பட்டென்று நெஞ்சில் பதிந்தாய் !
உன் எளிமையின் ஏகாந்தம் - என்னில்
பண் பாடும் தென்றலாய்
மண் வாசம் தரும் மழை சாரலாய் . . . ஏனோ
என்னில் பூவாசமாய் வீசுகிறாய் !
தோழியாய் உன்னிடம் தோற்று போனேன் . . . என்னில்
நாளிகைதோறும் நம்பிக்கை தந்தாய் . . .
வாழ்நாள் வசந்தமாய் வந்தவளே . . . ஏனோ
தொலைவில் தொடுவானமாய் தோன்றுகிறாய் !
நாளும் உனக்கு நன்மைகள் விளைந்திட - நானும்
நடராஜனை நம்பிக்கையுடன் தொழுகிறேன் . . .
வெற்றியின் மாலைகள் உன் தோள் சேர்ந்திட
வேதம் தந்தவனை தாள் பணிகிறேன் !
உற்சாகம் உடன் கொண்டு நீயும்
உலகினை வலம் வந்திட
உள்ளம் உருகி வேண்டுகிறேன் ,
உலகை அளந்தவனிடம் கை கூப்புகிறேன் !
இவள்
இனியவள் . . .
2/9/12
மனசா ? மதியா?
ஏதோ எழுத துடிக்குது மனசு ,
ஏதோதோ எண்ணி தவிக்குது மனசு !
யோசித்து பார்க்கும் அறிவா ?
நேசித்து தாக்கப்படும் மனசா?
மயங்கி மயங்கி மனம் சரிய
மருகி மருகி அறிவுறுத்தும் அறிவு !
நடப்பது என்னவோ,
நாடோடி காற்றே?
மனசா ? மதியா?
மறந்தும் சொல்வதாரோ ?
மயங்கி மயங்கி மனம் சரிய
மருகி மருகி அறிவுறுத்தும் அறிவு !
நடப்பது என்னவோ,
நாடோடி காற்றே?
மனசா ? மதியா?
மறந்தும் சொல்வதாரோ ?
Subscribe to:
Posts (Atom)

