, இனியவளின் இதய பகிர்வுகள் !

12/24/13

ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்....

ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்.... அழுகை, ஆறுதல், அன்பு, என அனைத்திலும்... பெறுவதில் மட்டுமல்ல ... தருவதிலும் தாராளமான சுகமிருக்கிறது... சில இடங்களில் ஏமாற்றம் கூட வலியுடன் கூடிய சுகமாகவே இருப்பதுதான் அதிசயம் .... சில பிரிவுகளும் .... நடக்க போகும் நன்மைக்காக சில பிரிவுகளை வலிய ஏற்கும் போதும் வேதனையான சுகம் தான், நினைவுகளின் வடிவினில் ... 

இந்த சுகமான தருணங்களின் வரிசையில் முக்கிய இடம்.... "எழுதுவது - பகிர்வது ".... மனதில் தோன்றியதை மறைக்காமல் பகிர, நல்ல நட்பினை தரும் இடம்.... எழுதுகோலுக்கும் காகித தாளுக்கும் இருக்கும் பரிசுத்த பகிர்வில் மனமெல்லாம் மயிலிறகாய் மாறி விடும் மாயம் இங்கு மட்டும் தான்.... வார்த்தைகளில் வெளிப்பட தயங்குவதெல்லாம் , புது காவிரி வெள்ளமென மடைதிறந்து கொட்டும் இடம் .... நம் மனதிற்கு நாமே நீதி வழங்கும் வழக்காடு மன்றம்.....

இதெல்லாம் தெரிந்திருந்தும் ... மிக பெரிய தவறென இந்த சொர்கத்தை மறக்க வேண்டிய சில பல சூழ்நிலைகள் .... இதுவே சரியான தருணம் என உணர்கிறேன் ...தவறுகளை திருத்தி கொள்ள .... இதோ வந்து விட்டேன் என் நட்பே.... உன்னிடமான என் உறவு என்றுமே நான் வருந்த விட்டதில்லை .... தவறு செய்து விட்டோமா ? என யோசிக்க அனுமதித்ததில்லை .... அத்தனையும் சரியாக அமைந்த பொழுது ஏது வருத்தப்பட நேரம் ???? உணர்ந்து விட்டேன் .... உன்னை கை கொண்டு விட்டேன் இப்போது .... உன்னை கண்டு பலர் பயப்படவும் செய்கின்றனர்... ஆனால் எனக்கு மட்டும் ஏனோ என்றும் மனதிற்கு மிக அருகினில்..... வந்து விட்டேன்.... இன்னும் 7 நாட்கள் மட்டுமே... சிறு வயதில், வங்கி வைத்த புது துணியை தினமும் தடவி பார்த்து மனம் குதூகலிக்கும்.... உடுத்த போகும் நாட்களுக்காக கனவுகளுடன் காத்திருக்கும்... இங்கும், இன்றும் அதே நிலை... உன் நினைவுகள் மேலோங்கி நிற்கிறது... நாட்களை நகர சொல்லி அவசர படுத்த தோன்றுகிறது... என்ன விந்தை உணர்வுகள்... இருப்பினும் இதும் சுகமாகவே இருக்கிறது...

புது வருட நாள் முதல் நம் பகிர்வுகள் ஆரம்பம் ...இனி எல்லாம் ஜெயமே ! நம்பிக்கையின் மறு உருவமாக, வேண்டியதெல்லாம் தந்து கொண்டிருந்த மாயாஜாலம் நீ.... ஆதலால் உரைக்கிறேன் .... இனி எல்லாம் ஜெயமே ....

இவள் 

இனியவள் .....


11/5/13

Without you ???

Dear...

You are the meaning of my life,


You are the dreams of my thoughts,


You are the lyrics of my feelings,


You are the literature of my silence,


You are the journey of my emotions,


You are the translation of my path,


You are the definition of my identity,


You are everything for me,


I am nothing without you...!



10/8/13

எத்தனை எத்தனை அழகு ...

உனக்கான என் நேரங்கள் 
மிக அழகானவை !

பெறுவதை விட 
தருவதில் உள்ள சுகம் போல !

காணாமல் கண் மூடி 
காத்திருக்கும் நொடிகள் போல !

மண் தழுவும் 
மழை வாசம் போல !

மலராமல் மலர்ந்திருக்கும் 
மலரின் நாணம் போல !

சின்ன குழந்தையின்
செல்ல சிரிப்பை போல !

தேர்ச்சிபெற்ற சிற்பியின் 
தேர்ந்தெடுத்த சிலை போல !

அந்திவானம் சாயும் போது  
சிந்தி சிதறும் வண்ணம் போல !

எத்தனை எத்தனை அழகு ...
அத்தனை அத்தனையும் போதவில்லையடி ,

உனக்கான என் நேரத்தின் 
அழகினை எடுத்து சொல்ல !!!


10/7/13


கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான் ....


உன்னில் நானாக இருந்து 
என்னில் நீயாக நடந்து முடிந்த 

காலம் இன்று சிரிக்கின்றது 
கண்சிமிட்டி தாண்டி போகின்றது ....

தவறுகள் மட்டுமே 
தாறுமாறாக தெரிகின்றது ...







குற்றங்கள் மட்டுமே ஏனோ 
சுற்றங்களுக்கு தெரிகின்றன ...

தட்டி கொடுத்த நிமிடங்கள் 
பட்டு போய்விட்டன ...

தெரிந்தே தவறு செய்தாலும்
பிரிந்து செல்ல முடியுமா?

தினம்தினம் ஆயிரம் வேஷங்கள் .... ஆனால் 
அத்தனையிலும் மாறாதது பாசங்கள் மட்டுமல்லவா? 

தென்றலென தேடிவரும் என் 
உள்ளம் உன்வாசலில் ....

கதவுகள் திறக்கவில்லைஎனில் 
காதோரம் சொல்லி செல்வேன் 
நமக்கான நம் நட்பின் கனவுகளை .... 


நடிக்கின்ற இந்த உலகத்தில் உன் 
துடிக்கின்ற இதயம் என்றும் 

மகிழ்ச்சியில் திளைத்திருக்க - என் 
வேண்டுதல்களை விட்டு செல்வேன் ....