, இனியவளின் இதய பகிர்வுகள் !

8/25/12

என்னசொல்ல?





மருகி மருகி 
உருகி உருகி
சருகு சருகாய் 
எரிந்து எரிந்து 
கருகிக் கருகி 
சரிந்து சரிந்து 
விரக்தியில் செல்கிறது 
விடியாத வாழ்வு.. .
வசந்தமே நீ இன்றி . . .

8/24/12



இன்பமோ துன்பமோ ....
இருந்துவிட்டு போ ...
இசையோடு இசையாக ...
இனிவரும் நாட்களில் ...
இதயத்தின் துடிப்புகளில் ....

8/20/12

நீ என்னை விட்டு விலகுவதுமில்லை . . .





நீ என்னை விட்டு விலகுவதுமில்லை
என்னை கைவிடுவதுமில்லை...
விளையாடி களைத்து வருவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
உலகத்தின் உருட்டலில்
உருண்டோடி கண் மயங்குவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
சவால்தனை ஏந்தி விட்டேன் ,
சடுதியிலே முடித்து விடுவேன் ... அன்று
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...

8/13/12


8/9/12






மெதுவா பாடு எதையாவது 

பனி போல நீங்கும் சுமையானது . . .

மனசோடு உள்ளத பேசு என்னோடு குறையும் பாரம்....

விலகாத அன்புடன் சேந்திருக்கணும் நீயும் நானும் . . .